Skip to main content

படை பெருத்ததோ... பார் சிறுத்ததோ...! முதல்வரை வரவேற்க தயாராகும் சேலம் திமுக!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Salem DMK ready to welcome the MKStalin


சேலத்திற்கு மே 24ம் தேதி வருகை தர உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, சேலம் மாவட்ட திமுக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

 

கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஓராண்டில், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், ஆவின் பால் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின இணைப்பு, மாணவிகளின் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

 

இதையடுத்து, 'ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை' என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரும் 24ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அவரை வரவேற்கவும், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளிலும் மாவட்ட திமுக நிர்வாகிகள் சுழன்றடித்து பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த நிலையில், சேலம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் அவசர செயற்குழுக் கூட்டம், கலைஞர் மாளிகையில் புதன்கிழமை (மே 19) நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 

Salem DMK ready to welcome the MKStalin

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில், 'ஓயாத  உழைப்பின் ஓராண்டு சாதனை' விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில்,  ஒரு லட்சம் தொண்டர்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

 

பொதுக்கூட்டம் நடக்கும் அன்று விமானம் மூலம் சேலம் வருகை தரும் முதல்வரை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வரவேற்க தயாராக வேண்டும்.

 

மத்திய மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றியம், பேரூர், மாநகர கோட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், இளைஞரணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கிளை நிர்வாகிகள் அனைவரும், 'படை பெருத்ததோ... பார் சிறுத்ததோ...' என காண்போர் வியக்கும் வண்ணம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.