Skip to main content

மனைவியைக் கழுத்து அறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

salem district husband and wife police investigation

 

சேலம் அருகே, திருமணம் ஆன 43 நாளிலேயே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை அடுத்த கோராத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). விவசாயி. வீட்டைச் சுற்றி சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருடைய மனைவி மோனிஷா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 43 நாள்கள் மட்டுமே ஆகின்றன. தங்கராஜ், பகுதி நேரமாக கேபிள் டிவி வயர் இணைப்பு கொடுக்கும் வேலையும் செய்து வந்தார்.

 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப். 6) இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு, தூங்கச்சென்றனர். புதன்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

 

வீட்டுக்குள், மோனிஷா கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தங்கராஜ், கேபிள் டிவி வயரில் தூக்கிட்டு சடலமாகத் தொங்கினார். சடலங்களைக் கண்டு உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து வீராணம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அஸ்தம்பட்டி சரக காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

 

இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் நடந்த சில நாள்களிலேயே மோனிஷாவின் நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதையும் கணவர் கண்டித்துள்ளார்.

 

சேலம் கன்னங்குறிச்சிதான் மோனிஷாவின் சொந்த ஊராகும். அங்கு மோனிஷாவின் அத்தை மோகனா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர், மோனிஷாவின் தங்கையிடம் நெருங்கிப் பழகி வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த மார்ச் 24- ஆம் தேதி, அவருடைய அத்தை மகனுக்கு பிறந்த நாள் வந்தது. இதையடுத்து அவர் பிறந்த நாளை கொண்டாட கோராத்துப்பட்டியில் உள்ள மோனிஷா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், அவருக்கு கேக் கொடுத்துள்ளார். இதை நேரில் பார்த்த தங்கராஜூக்கு, மனைவியின் நடத்தையில் மேலும் சந்தேகம் வலுத்தது. அந்த நாளில் இருந்து தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

மனைவி தடம் மாறிவிட்டதாக கருதிய தங்கராஜ், அவரை தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளார். இதையடுத்து ஏப். 6- ஆம் தேதி மனைவியை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்கிறது காவல்துறை தரப்பு. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.