Skip to main content

ரூ.6 கோடி பஞ்சாயத்து... இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த கொலை வழக்கு..!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

Rs 6 crore panchayat ... inspector arrest
ஹரிகிருஷ்ணன்

 

 

ரூ.6 கோடி மதிப்பிலான நிலப்பஞ்சாயத்தில் வியாழனன்று ஒருவர் கொலையான நிலையில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட ஆறுக்கும் அதிகமான நபர்கள் மீது கொலை வழக்கு தற்பொழுது பதிவாகியுள்ளது. இதனால் மீண்டும் சாத்தான்குளம் துணைச்சரக காவல்துறை தலைப்பு செய்தியாகிவருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா கொம்மடிக் கோட்டை சொக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் தனிஷ்லாஸின் மகனான செல்வன். லாரியில் தண்ணீர் ஏற்றி அதனை விற்பனை செய்துவந்த செல்வனிற்கு பங்காரு ராஜன் மற்றும் பீட்டர் ராஜன் என இரு சகோதரர்கள் உண்டு. இவர்களுக்கு சொந்தமாக படுக்கப்பத்து டூ காந்தி நகர் செல்லும் வழியில் ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் உண்டு. இவர்களது நிலத்திற்கு அருகில் இவர்களது சித்தப்பா சிலுவைதாசனின் நிலமும் இருந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்குமுன்பு, செல்வனின் சித்தப்பா சிலுவைதாசன் தனக்கு சொந்தமான நிலத்தை அ.தி.மு.கவின் மாவட்ட வர்த்தகர் பிரிவு செயலாளரான திருமணவேல் என்பவரின் மனைவிக்கு கிரையம் செய்து கொடுத்திருக்கின்றார்.

 

Rs 6 crore panchayat ... inspector arrest
செல்வன்

 

 

இதேவேளையில், அருகிலிருந்த செல்வனின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தையும் அபகரிக்கும் எண்ணத்தில் பிரச்சனையை செய்திருக்கின்றார் அ.தி.மு.கவின் திருமணவேல். இது தெரிந்த செல்வன் மற்றும் அவரது சகோதாரர்கள் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அ.தி.மு.க பிரமுகர் என்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை தட்டார்மடம் காவல்நிலையம்.

 

சாத்தான்குளம் காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க பிரமுகருடன் சேர்ந்து நிலத்தை கொடுக்குமாறு மிரட்டிவருவதாகவும், தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தன் மீதும், தன்னுடைய சகோதரர்கள் மீதும் பொய் வழக்குகள் போட்டுள்ளதாகவும் மாநில மனித உரிமை ஆணையம் தொடங்கி, சாத்தான்குளம் டி.எஸ்.பி. வரை புகார் கொடுத்து வந்துள்ளனர் செல்வனின் குடும்பத்தினர். இருப்பினும் புகார்கள் தேக்க நிலையிலேயே இருந்திருக்கின்றது. இது இப்படியிருக்க, வியாழக்கிழமையன்று மதியம் 1.30 மணியளவில் தட்டார்மடம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கொழுந்தட்டு அருகில் மளிகை கடை ஒன்று அருகில் செல்வன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது TN69 K 8957 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை மறித்து செல்வனை கடத்தி சென்றதாகவும், கடத்தப்பட்ட அவர் உருட்டுக்கட்டையால் தாக்கி காட்டுக்குளம் பகுதியில் வீசிவிட்டு சென்றதாகவும், காயம்பட்ட செல்வனை மீட்டு  நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சேர்க்க அவர் இறந்துவிட்டார் என தகவலளித்தது தட்டார்மட காவல்துறை. "இந்த கொலை சம்பவத்திற்கு அடிப்படையே நிலப்பஞ்சாயத்துதான். இந்த கொலைக்கு காரணம் அ.தி.மு.க பிரமுகர் மற்றும் தட்டார்மட இன்ஸ்பெக்டருமே" என கொலையுண்ட செல்வனின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Rs 6 crore panchayat ... inspector arrest
திருமணவேல்

 

 

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமையன்று தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன். மீண்டும் சாத்தான்குளம் காவல்துறை துணைச்சரகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் சாத்தான்குளம் பகுதி மீண்டும் பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.