Skip to main content

தொழிலதிபர் வீட்டில் நடந்த பகல் கொள்ளை..!!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

Robbery in business man house
மாதிரி படம்

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்தப்பெருமாள் கோவில் அமைந்துள்ள சன்னதி தெருவில் வசித்து வருபவர் காசிவிசுவநாதன். இவரது மகன் ராஜ சுப்பிரமணியன், தொழிலதிபரான இவர் சொந்தமாக பள்ளிக்கூடம், நவீன அரிசி ஆலை ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

 

நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று மதியம் 3 மணியளவில் குடும்பத்தினருடன் அவர்கள் நடத்தும் பள்ளிக்கு சென்று விநாயகர் சதுர்த்தி பூஜை செய்துள்ளனர். பூஜைகளை முடித்துகொண்டு மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு வந்தவுடன் ராஜ சுப்பிரமணியன் தனது அறைக்கு சென்று சென்றுள்ளார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 32 சவரன் நகை 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் ராஜ சுப்பிரமணியன். போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்ததோடு கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து அவர்கள் உதவியுடன் தடையங்களை சேகரித்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதேபோல் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள வீட்டில் பகல் 3 மணியளவில் உள்ளே புகுந்து கொள்ளையடித்த சம்பவம் திருக்கோவிலில் நகரில் உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.