Skip to main content

புரோகிதர்கள் வராததால் இறந்தவர்களின் அஸ்தியினை தாங்களாகவே கரைக்கும் உறவினர்கள்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

rameshwaram sea temples Priests not there peoples


ஊரடங்கு காரணமாக ராமேஸ்வரம் பகுதிக்கு புரோகிதர்கள் வருகை இல்லாததால் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த அஸ்தியை எவ்வித சடங்கும் செய்யாமல் தாங்களாகவே கடற்பரப்பில் கரைக்கின்றனர் இறந்தவர்களின் உறவினர்கள்.
 


இறந்தவர்களின் அஸ்தியை, புரோகிதர்களைக் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் கடற்பரப்பில் கரைத்தால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பது பலரின் நம்பிக்கை. இதனால் எங்கு இறப்பினும் இறந்தவர்களின் அஸ்தியினை பாதுகாத்துக் குறிப்பிட்ட வேளையில் ராமேஸ்வரம் கடற்பரப்பில், புரோகிதர்கள் துணையுடன் பூஜை புனஸ்காரங்கள் செய்து கரைப்பார்கள் இறந்தவர்களின் உறவினர்கள். தற்பொழுது கரோனா வைரஸ் தொற்றுக் காரணாமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முற்றிலும் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது, பின் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் போக்குவரத்து இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 

rameshwaram sea temples Priests not there peoples


இதனால் தமிழகத்தில் மண்டலம் வாரியாக பேருந்துகள் இயக்கப்பட்டதையடுத்து கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்குச் சொந்த வாகனங்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் மற்றும் மறைந்த உறவினர்களின் அஸ்தியைக் கொண்டுவந்து அக்னி தீர்த்த கடற்கரையில் முறைப்படி பூஜைசெய்து கரைப்பதற்காகக் குடும்பத்துடன் பலர் வந்தவண்ணம் உள்ளனர். 
 


எனினும், கரோனா ஊரடங்கு காரணமாக இவர்களுக்காக பூஜை புனஸ்காரங்கள் செய்து தரும் புரோகிதர்கள் ராமேஸ்வரத்திற்கு வரவில்லை என்பதால் ஏமாற்றமடைந்து தாங்கள் கொண்டு வந்த அஸ்தியைத் தாங்களாகவே அக்னி தீர்த்தக் கடலில் கரைத்து விட்டு முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி வழிபாடு நடத்திவிட்டு கடலில் குளித்து விட்டுச் சென்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.