Skip to main content

பென்னிகுக் பொங்கல்!  பொதுமக்கள் கொண்டாட்டம்!!

Published on 15/01/2019 | Edited on 15/01/2019

 

p


தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைபெரியார் அணையை தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான தேக்கடியில்  கட்டினார் கர்னல் ஜான் பென்னிகுக்.   அதன்மூலம் தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்ட விவசாய நிலங்களுக்கும் மக்களின் குடிநீருக்கும் முல்லை பெரியாறு அணை பெரிதும் பயன்பட்டு வருகிறது.

 

 இப்படி தென்மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்திற்காக முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக்கின் பிறந்த நாளான தை 1ம் தேதி தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்ட பொது மக்கள் பொங்கல் திருநாளன்று கர்னல் பென்னிகுக் சிலை முன்பு பொங்கல் வைத்து வணங்கி வருவது வழக்கம்.

 

p

 

 இந்த ஆண்டு தைப்பொங்கலன்று பென்னி குக்கின்  178ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பாலார்பட்டி கிராமத்தில் 20ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்  தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கூடலூர் என்பது சுருளிப்பட்டி பாளையம்,  கோவை தேவாரம் சின்னமனூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பென்னிகுக்  திருஉருவ படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
அதன் பின் பாலார்பட்டி கிராமத்தின் சார்பில் பென்னிகுக் திருஉருவ படத்துடன் ஊர்வலமாக தேவராட்டம் ஆடியபடி அடி லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் நினைவு மண்டபத்திற்கு பொதுமக்கள் சென்றனர்.  அங்கு  45 பொங்கல் பானைகள் வைத்து பெண்கள் குழவை இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

 

p

 

முன்னதாக தேனிமாவட்ட மண்ணை நேசிக்கும் விதமாக மேற்குதொடர்ச்சிமலை திரைப்படம் எடுத்த இயக்குனர் லெனின் பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொங்கல் பானையில் மூன்றுமுறை அரிசி இட்டு தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கர்னல் பென்னிகுக்கின்  பேத்தியான டயனாஜிப் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“லண்டனில் போய் போஸ் கொடுத்துவிட்டு வந்தார்கள்; அந்த சிலையின் நிலை என்ன ஆச்சு” - அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

 ''They went to London and posed; What is the status of that statue''- Minister Sellur Raju said

 

'பெரியசாமியும், சட்டமன்ற உறுப்பினர்களும் லண்டனில் திறந்து வைத்த பென்னிகுவிக் சிலை இன்று என்ன நிலையில் இருக்கிறது பார்த்தீர்களா?' என அதிமுகவின் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

 

இன்று நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''அதிமுகவின் ஒரே எதிரி யார் என்றால் திமுக தான். அந்த திமுகவை ஒழிக்கும் வரை அதிமுக ஓயாது என்றார் எம்ஜிஆர். இந்த இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கிய போது, ‘அவரின் படத்திற்கு கேரண்டி உண்டு; எம்ஜிஆர் உருவாக்கிய இந்த கட்சிக்கு கேரண்டி கிடையாது. இவர்கள் விசில் அடிச்சான் குஞ்சுகள்’ என்று கேலி பேசியவர்தான் கலைஞர். அதே கலைஞரை 11 ஆண்டுக் காலம் வனவாசம் போக வைத்தது அதிமுக படை,எம்ஜிஆரின் படை.

 

அரிதாரம் பூசியவர்கள் அரசியல் செய்ய முடியுமா? சினிமா நடிகர் அரசியல் பண்ண முடியுமா? இது என்ன கால்சீட்டா என்று கேலி பேசியவர் கலைஞர். அவரை கோட்டை பக்கமே வர முடியாமல் செய்தவர் எம்ஜிஆர். வெள்ளையனே வெளியேறு எனப் போராட்டம் நடத்திய நாடு தமிழ்நாடு. அந்த தமிழ்நாட்டில் ஒரு வெள்ளையன் மட்டும் ஈர உணர்வு கொண்டவனாக இருந்திருக்கிறான் என்பதற்கு உதாரணம் தான் ஜான் பென்னிகுவிக்.

 

ஜான் பென்னிகுவிக் மட்டும் மதுரை மாவட்டத்திற்குப் பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் தேனி மாவட்டமே இந்த செல்வாக்கோடு இருக்காது. ஐந்து மாவட்ட விவசாயிகள், ஐந்து மாவட்ட மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு இருப்பார்கள்.  திண்டுக்கல் மாவட்டம், மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த மக்கள் எல்லாம் குடிநீர் குடிக்கிறார்கள் விவசாயம் பண்ணுகிறார்கள் என்றால் ஜான் பென்னிகுவிக் தான் காரணம். ஜெயலலிதா அவருக்கு மணிமண்டபம் அமைத்து அவருக்கு பெருமை சேர்த்தார்.

 

அதே மாதிரி தானும் பெருமை சேர்க்க வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே இருந்து ஒரு அமைச்சர், தன்னுடைய மாவட்டத்தினுடைய எம்எல்ஏக்கள் எல்லாம் சேர்ந்து லண்டனில் ஜான் பென்னிகுவிக்கிற்கு சிலை வைத்தார்கள். அந்த சிலை இப்பொழுது என்ன நிலையில் இருக்கிறது. இந்த ஆட்சியில் அந்த சிலை மூடி வைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் ஐ.பெரியசாமியும், சட்டமன்ற உறுப்பினர்களும் சிலையைத் திறந்து வைத்து போஸ் கொடுத்துவிட்டு வந்தார்கள். ஆனால் இன்று அந்த சிலை அப்புறப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது'' என்றார்.

 

 

Next Story

“இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிக்குயிக் சிலை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

TamilNadu government will be set penny kwik statue in England

 

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 இன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து இலண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு. சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.