Skip to main content

எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு! 

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Raid on places owned by Edappadi Palanisamy's aide!

 

கடந்த அதிமுக அரசின் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரும், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநில தலைவராகவும் இருந்த இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (22.10.2021) திருச்சியில் 4 இடங்களில் அதிரடியாக சோதனை செய்துவருகின்றனர்.

 

இளங்கோவன், தன் மகன் பிரவீன் பெயரில் கடந்த 2016இல் சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் திருச்சி முசிறியில் துவங்கி நடத்திவந்தார். இந்த அறக்கட்டளையின் கீழ் பாலிடெக்னிக் மற்றும் வேளாண்மை கல்லூரி செயல்பட்டுவருகிறது. மேலும் இளங்கோவன், கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய கூட்டுறவு வங்கியின் சேர்மேனாக இருந்தவர், மீண்டும் 2018இல் சேர்மேனாக மீண்டும் அதே பதவிக்கு வந்தார். 

 

கடந்த 2014க்கு முன்பு வரை இளங்கோவனின் சொத்து மதிப்பு 1 கோடியே 52 லட்சத்து 65 ஆயிரத்து 540 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2020 வரை 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய் என்ற அளவிற்கு அவருடைய மகன், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டவா்கள் பெயர்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் முசிறி எம்.இ.டி. பாலிடெக்னிக் கல்லூரியை நிர்வகித்துவரும் பிரவீன்குமாரும் இதில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தொடர்ந்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில், இன்று மாலை முழுவிவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.