Skip to main content

கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை மழையில் நனையவிட்ட அவலம்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Purchased paddy bundles soaked in rain

 

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இன்று (12/04/2021) காலை புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழைக்கு டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டிருந்த கடலை நனைந்துள்ளது. அதேபோல, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வல்லாவரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் செயல்படும். இங்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை ஒவ்வொரு நாளும் லாரியில் ஏற்றி அழியாநிலை போன்ற பல ஊர்களிலும் உள்ள பாதுகாப்பான குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

Purchased paddy bundles soaked in rain

 

ஆனால், தேர்தலுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சில மூட்டைகளை மட்டும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வெயில் அடித்துவந்த நிலையில், இன்று (12/04/2021) காலை மழை பெய்ததால், திறந்த வெளியில் இருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளது.

 

காலை 10.00 மணி வரை கொள்முதல் நிலையம் பகுதிக்கு எந்த ஒரு அதிகாரியும் வந்து நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபடவில்லை என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இதேபோல, பல ஊர்களிலும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

 

Purchased paddy bundles soaked in rain

 

மழை தொடர்ந்தால் இரண்டு நாட்களில் மூட்டைகளில் உள்ள நெல் பயிர் முளைத்து விடக் கூடிய சூழல் உருவாகிவிடும். அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுப் பணமும், விவசாயிகளின் வியர்வையில் விளைந்த நெல்மணிகளும் வீணாகி வருவது வேதனைக்குரியது.

 

வல்லவாரி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 50 நாட்களுக்கு முன்பு நாகுடி பகுதி விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட சுமார் 500- க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவிகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.