Skip to main content

வாடகை வீட்டை காலி செய்வதில் தகராறு... போலீசார் விசாரணை!

Published on 24/04/2022 | Edited on 24/04/2022

 

 Problem in vacating rental house ... Police investigation!

 

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மண்டலம் 27வது வார்டு மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்றிருப்பவர் திமுகவை சேர்ந்த சதிஷ். இவர் மீதுதான் அடிதடி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தேடிவருவதால் கவுன்சிலர் தலைமறைவாகியுள்ளார்.

 

வேலூர் சத்துவாச்சாரியில் வசித்து வரும் சதிஷின் தந்தை ஜெய்சங்கருக்கு இரண்டு மனைவிகள். முன்னாள் அதிமுக கவுன்சிலரான ஜெய்சங்கர் தனது இரண்டாவது மனைவி குடும்பத்தை சத்துவாச்சாரியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார். 10 ஆண்டுகாலமாக அந்த வீட்டில் அவர்கள் தங்கிவந்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் சென்னையில் வசிக்கும் வாசன் என்பவருடையது. அவர் தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தவர், வீட்டை காலி செய்யச்சொன்னதாக கூறப்படுகிறது. சதிஷின் தந்தை வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார். பலஆண்டுகாலமாக குடியிருந்துவருகிறோம், குடியிருப்பவருக்கே வீடு சொந்தம் என ரூல்ஸ் பேசியுள்ளனர், பல மாதங்களாக இந்த பஞ்சாயத்து நடந்துவந்துள்ளது.

 

இந்நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை வீடு காலி செய்யச்சொல்லி வாசன் தனது உறவினர்கள் உட்பட சிலருடன் காரில் அந்த வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையாம். இந்ததகவல் ஜெய்சங்கருக்கு தெரிந்து அவர் தனது ஆட்கள் சிலரை காரில் அங்கே அனுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர், இதனால் இருதரப்புக்கும் அடிதாடியாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர் மற்றும் அவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிசிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் தந்ததன் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

 

இதுக்குறித்து சதிஷ் கருத்தறிய தொடர்புக்கொண்டபோது அவரது எண் ஸ்விச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக சதிஷ் ஒரு ஆடியோ பேசி சமூகவளைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அந்த வீடுக்காக நாங்கள் சில லட்சம் அட்வான்ஸ் தந்துள்ளோம். அதை தரமறுப்பதாலே காலி செய்யவில்லை. இதுக்குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வீட்டை காலி செய்யச்சொல்லி மிரட்டினார்கள், நான் யாரையும் அடிக்கவில்லை. திருநங்கையை நான் அடித்தாக கூறுகிறார்கள். திருநங்கைகளுக்கு நான் யார் என்று தெரியும். அவர்களும், பெண்களும் என்னை நல்லவன் என்றே சொல்வார்கள். இதன்பின்னால் அரசியல் உள்ளது. அவர்கள் இதன்பின்னால் இருந்து திட்டமிட்டு என்மீது வழக்கு பதிவு செய்யவைத்து சிக்கவைத்துள்ளார்கள். நான் வேறு ஒரு அணி என்பதால் சிக்கவைத்துள்ளார்கள் என்கிறார்.

 

உட்கட்சி பிரச்சனையால் சிக்கவைக்கப்பட்டுள்ளாரா என திமுகவினரிடம் விசாரித்தபோது, மாவட்ட நிர்வாகிகள் சிலருடன் ஏற்பட்ட முரண் காரணமாக இந்த பிரச்சனையில் சிலர் சொல்லித்தான் சதிஷ் மீது வழக்கு போடவைத்துள்ளார் என்கிற எண்ணத்தில் ஆடியோவில் பழிவாங்குகிறார் என்கின்றனர். அதேபோல் இந்த விவகாரம் 5 மாதத்துக்கு முன்பே பஞ்சாயத்துக்கு வந்தபோது, அந்த வீட்டை காலி செய்து தந்துடுங்க எனச்சொல்லியும் சதிஷ் குடும்பம் செய்யவில்லை என்கிறார்கள்.

 

இந்நிலையில் சதிஷ் தரப்பு இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதில் சிலர் கார் மூலமாக வீட்டுக்கு வருவதும், வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் பேசுவது, மற்றொரு வீடியோவில் ஒரு பெண் வீட்டுக்குள் வருவதும், ஒரு திருநங்கை வீட்டுக்குள் வந்து ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

 

வேலூர் மாநகராட்சியை அடுத்த பெருமுகை ஊராட்சியில் அந்த ஊராட்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் வருவாய்த்துறை புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒருமாதத்துக்கு முன்பு அந்த கிராம ஊராட்சிமன்ற தலைவர், துணைதலைவருடன் சேர்ந்துக்கொண்டு அப்பகுதி பொதுமக்கள் சிலரிடம் லட்சங்களில் பணம் வாங்கிக்கொண்டு வீட்டுமனை தருவதாக கூறி பணம் வசூல் செய்துள்ளனர். அந்த இடத்தை சுத்தம் செய்து அளவீடுகள் செய்யதுவங்கியுள்ளனர். இதுக்குறித்த புகார் சமூக ஆர்வலர்கள் வழியாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு சென்றதன் மூலம் அவர்கள் நேரடியா வந்து பார்த்து விசாரித்துவிட்டு எச்சரித்து, வீட்டுமனை போடுவதை தடுத்தனர். இந்த பிரச்சனையில் திமுகவில் சிலர் சம்மந்தப்பட்ட தலைவர், துணைதலைவருக்கு ஆதரவாக இருந்தனர். அந்த வீட்டுமனை விவகாரத்தின் பின்னணியில் இவரும் இருந்தார் என்கிறார்கள். 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.