Skip to main content

திருச்சி - சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்குகிறது இண்டிகோ நிறுவனம்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

Private airline plans to offer additional flights

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை வழங்கிவருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே சென்னையிலிருந்து திருச்சிக்குத் தினந்தோறும் மூன்று விமான சேவைகளை  வழங்கிவந்தது.

 

இந்நிலையில், வருகிற 30ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வரும் இண்டிகோ விமானம், மீண்டும் சிங்கப்பூருக்கு இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானம் மீண்டும் மறுநாள் காலை 10 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்து இரவு 10:55 மணிக்கு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லும். இதனால் திருச்சியிலிருந்து சென்னைக்கும், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும் மேலும் ஒரு விமான சேவை வழங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி பாஸ்போர்ட்; விமான நிலையத்தில் வைத்து காப்பு போட்ட காவல்துறை

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Returnee arrested on fake passport at Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது தஞ்சாவூர்  ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

விமான ஓடுதளத்தில் உணவருந்திய பயணிகள்; இண்டிகோ நிறுவனத்துக்கு அபராதம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Penalty for Indigo for Passengers eating on the runway

டெல்லியில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று கடந்த 16ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அன்றைய தினத்திற்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. 

ஆனால், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி மற்றும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.