Skip to main content

பிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

சேலத்தில், நீதிமன்றத்திலேயே கொலை வழக்கு கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 


சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (32) கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22, 2019) காலை அவரை விசாரணைக்காக சேலம் 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

 

 Prisoner suicide attempt in salem!!


அப்போது அவர் திடீரென்று பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு விழுந்தார். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் சவுந்தர்ராஜனை மீட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 


சிறையில் கஞ்சா வைத்திருப்பதாகவும், செல்போன் வைத்திருப்பதாகவும் கூறி காவல்துறையினர் அடித்து துன்புறுத்துவதால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 


இதற்கிடையே கைதி சவுந்தர்ராஜன் குறித்து சில பரபரப்பு தகவல்களும் கிடைத்துள்ளன. இவர் கொலை வழக்கு ஒன்றில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர், நங்கவள்ளி பகுதியில் ஒரு பெண்ணைக் கொன்று நகை பறித்த வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

 


இவர் சிறையில் சுகபோகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக சிறைக்குச் செல்பவர்கள் செருப்பு அணிந்து செல்லவே அனுமதி உண்டு. ஆனால் சவுந்தர்ராஜன், சிறையில் இருந்து வெளியே வந்தபோது ஷூ அணிந்து வந்தார். அந்த ஷூவுக்குள்தான் பிளேடை மறைத்து எடுத்து வந்துள்ளார். 

 


நீதிபதியிடம், தனக்கு சிறைக்குள் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தருவதில்லை என்று கூறிய சவுந்தர்ராஜன், திடீரென்று பிளேடால் கைகளையும், கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலை நாடகமாடியதும் தெரிய வந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.