Skip to main content

பாளை மத்திய சிறையில் கைதி அடித்துக் கொலை... வழக்குப் பதிய வலியுறுத்தி தொடரும் போராட்டம்!

Published on 06/05/2021 | Edited on 07/05/2021

 

prison incident...people struggle

 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பள்ளி மாணவி ஒருவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, மாணவன் ஒருவனை மிரட்டிய வழக்கில் கைதானவர் வாகைக்குளம் கிராமத்தின் முத்து மனோ. ஸ்ரீவைகுண்டம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட முத்துமனோ நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கே கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் விசாரணைக் கைதியான முத்துமனோ அடித்துக் கொல்லப்பட்டார். 

 

சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துக் கொலைச் சம்பவத்திற்குக் காரணமான சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முத்துமனோவின் உறவினர்கள் கடந்த 13 தினங்களாக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் காரணமாக சிறை அதிகாரிகள், வார்டன்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கொலைச் சம்பவத்திற்குக் காரணமான சிறைக் கைதிகள் 7 பேர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் முத்துமனோவின் சொந்தக் கிராமமான வாகைக்குளத்தில் தொடர்புடைய பாளை மத்திய  சிறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். முத்துமனோ குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை, நிறுவனத் தலைவர் ராமர் பாண்டியன், மள்ளர் பேராயம் ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி மள்ளத்தி, தேவேந்திரகுல எழுச்சி இயக்கம் கண்ணபிரான் உட்பட முத்துமனோவின், உறவினர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

 

மேலும் அதிகாரிகள் தரப்பிலோ தற்போதைய சூழலில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நிவாரணப் பணிக்காக அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் போராட்டம் நீடித்த வண்ணமிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.