Skip to main content

புதுச்சேரிக்கு வரும் மோடி.! கருப்புக்கொடி காட்டப் போவதாக சமூக அமைப்புகள் அறிவிப்பு..!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Prime Minister Narendra Modi visiting pondicherry

 

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (25.02.2021) புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். 

 

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததால், நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது. அரசும் கவிழ்ந்தது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நரேந்திர மோடி இன்று புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக புதுச்சேரி லாஸ்பேட்டைக்கு வரும் அவர், அங்கிருந்து காரில் பயணித்து ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

 

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே ரூ.2,426 கோடி செலவிலான நான்குவழிச் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.491 கோடி செலவில் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை கிளையை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து வைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி செலவில் புதுச்சேரி துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம் சென்னை - புதுச்சேரி இடையே சிறிய ரக சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அதேபோல் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் செயற்கை ஓடுபாதை அமைக்கும் திட்டம், ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.28 கோடி செலவில் அதிநவீன  ஆராய்ச்சி வசதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளடக்கிய ரத்த வங்கி அமைக்கும் பணிகளையும் தொடக்கி வைக்கிறார்.

 

லாஸ்பேட்டையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட மகளிர் விடுதியைத் திறந்து வைக்கிறார். கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடி செலவில் பழங்காலத்தில் இருந்த மேரி கட்டடம், அதே முறையில் புதுப்பிக்கப்பட்டதையும் திறந்துவைக்கிறார். ஜிப்மர் அரங்கத்தில் இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதுச்சேரியிலும் சுயசார்பு இந்தியா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

 

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து மீண்டும் காரில் பயணித்து லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் 12 மணிக்கு நடைபெறும் பா.ஜ.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். நரேந்திர மோடியின் வருகையையொட்டி லாஸ்பேட்டை மைதானம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் சாலையோர தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு சாலைகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூடுதல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவார் என தெரிகிறது. இதில் முதலமைச்சர் வேட்பாளர், தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்தும் பேசப்பட்டு, இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர், சமீபத்தில், “நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” என்று தெரிவித்திருந்தார். இதனால், அதிருப்தியில் இருக்கும் ரங்கசாமி, இதில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.  

 

Prime Minister Narendra Modi visiting pondicherry

 

இதனிடையே, புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக பல்வேறு சமத்துவ சமூக ஜனநாயக இயக்கங்கள் அறிவித்துள்ளது. மேலும் அந்த இயக்கங்கள், ‘புதுச்சேரி மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சூழ்ச்சிகள் மூலமாக கவிழ்த்து ஜனநாயக படுகொலை செய்து, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் 10% உள் ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டி மற்றும் புதுச்சேரி - தமிழகத்தை சுடுகாடாக்கும் பாசிச பா.ஜ.க மோடி அரசை கண்டித்து கருப்புக் கொடி காட்டுவோம்’ என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.