Skip to main content

200% வரை உயர்ந்துள்ள மூலப்பொருட்களின் விலை! கவன ஈர்ப்பு போராட்டத்தில் அச்சக சங்கங்களின் கூட்டமைப்பு! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 


காகிதம், அச்சு மூலப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. மேலும், இதற்கான ஜி.எஸ்.டி வரி 18% வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், காகிதம், அச்சு மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், ஜி.எஸ்.டி. வரியை 18% என இருப்பதை மாற்றி 12% என குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் சார்பில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். 

 

தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் என்பது தமிழ்நாடு முழுவதும் 30 சங்கங்களை உள்ளடக்கியது. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது வரலாறு காணாத வகையில் காகிதம் மற்றும் அச்சு மூலப்பொருட்களின் விலை 150 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2021ம் ஆண்டு ரூ.40 ஆயிரமாக இருந்த 1 மெட்ரிக் டன் பேப்பர் தற்போது ரூ.95 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மேலும் காகித தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நோட்டு மற்றும் புத்தகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 


இந்நிலையில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் சார்பில் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில், காகிதம் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல். அச்சுத் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி 5 முதல் 12 சதவிகிதம் என்ற நிலையில் இருந்து தற்போது 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளதை குறைக்க வேண்டும். அச்சகங்கள் அனைத்தையும் சேவை என்ற நிலையில் இருந்து உற்பத்தியாக மாற்ற வேண்டும். உற்பத்தியாளராகப் பதிவு செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். காகிதம் மற்றும் அச்சு மூலப்பொருட்களின் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய விலை ஏற்றத்தை வர்த்தக பொது இயக்குநரகம் மூலமாக கட்டுப்படுத்த வேண்டும். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது தமிழகம் தழுவிய போராட்டமாக உள்ளது. பிறகு நாடு தழுவிய போராட்டமாக மாறுவதற்குள் மத்திய அரசு பரிசீலித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். 

 

இந்தப் போராட்டம், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், செயலாளர் செந்தில்குமார், ராஜேந்திரன், ஜாகிபீட்டர், சுந்தர், துரைக்குமணன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அச்சக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

“ஜி.எஸ்.டி: வரி அல்ல… வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
GST Not a tax a waybust says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஜி.எஸ்.டி.: வரி அல்ல… வழிப்பறி’ எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டியைப் பார்த்து காப்பர் சிங் டேக்ஸ் (Gabbar Singh Tax) எனப் புலம்புகின்றனர்!. 

GST Not a tax a waybust says CM MK Stalin

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.