Skip to main content

விசைத்தறி உரிமையாளர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை: செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Power locomotive owner passes away with family; Police investigate cell phone calls!

 

நாமக்கல் அருகே விசைத்தறி பட்டறை உரிமையாளர் மனைவி, மகளுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர முடிவுக்கான காரணம் குறித்து அவர்களின் செல்போன் அழைப்புகளை வைத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள கோயக்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). அதே ஊரில் விசைத்தறி பட்டறை நடத்தி வந்தார். இவருடைய மனைவி நீலாம்பாள் (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிரீத்தி (21), திருமணமாகி ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். 16 வயதான இளைய மகள் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். 

 

மூத்த மகள் பிரீத்தி அன்றாடம் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். அதன்படி, ஜன. 25ம் தேதி மதியம், பெற்றோருக்கு போன் செய்துள்ளார். பல முறை அழைத்தபோதும் யாரும் செல்போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர், வீட்டின் அருகே உள்ள சித்தப்பா மகன் சரண் என்பவருக்குச் செல்போனில் தொடர்பு கொண்டார். 

 

இதையடுத்து சரண், பெரியப்பா வீட்டிற்குச் சென்று பார்த்தார். அங்கு மாடியில் உள்ள அறையில் வெங்கடாசலம், நீலாம்பாள், இளைய மகள் ஆகியோர் தூக்கில் சடலமாகத் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உறவினர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். திருச்செங்கோடு புறநகர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலங்களைத் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

முதற்கட்ட விசாரணையில், விசைத்தறி உரிமையாளர் வெங்கடாசலத்திற்கு கடன் தொந்தரவுகளோ, பெரிய அளவில் தொழில் நட்டம் ஏற்பட்டதாகவோ அல்லது மூத்த மகளின் குடும்பத்திலோ எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவம் நடந்த வீட்டில் தேடிப்பார்த்ததில் தற்கொலை குறிப்புகளோ கடிதங்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.

 

அவர்களில் யாருக்காவது தீராத உடல் பாதிப்புகள் இருந்ததா, இளைய மகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் இப்படியொரு துயர முடிவை எடுத்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வெங்கடாசலம் மற்றும் இளைய மகள் ஆகியோரின் செல்போன்களைக் கைப்பற்றி, அதில் பதிவான அழைப்புகளை வைத்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.