Skip to main content

“வேர்களை தேடும் விழுதுகள்..! மரபுகளை மீட்டெடுக்க புதிய முயற்சி..!!”

Published on 22/11/2018 | Edited on 22/11/2018


   
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்த பழங்கால மரபுகள், பழைமையான கோவில்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  

   

culture


“மரபுநடை”என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் பள்ளி ஆசிரியருமான ராஜகுரு. அக்காலத்தில் இருந்த பழக்க வழங்கங்கள், சமய வழிபாட்டு முறைகளையும் இக்கால மாணவர்கள் அறிந்து கொள்ள, மாதத்தில் ஒரு நாளை தேர்வு செய்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பழங்கால மரபுகளை பற்றி, அந்த ஊர்களுக்கே அழைத்து சென்று இவர் விளக்கி வருகிறார்.  அந்த வகையில் 10-வது மரபுநடை, ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரிலும், தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரிலும் அண்மையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு, நரிப்பையூரில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இப்போது பராமரிப்பின்றி காணப்படும் சிவன் கோவில் பற்றி விளக்கினார். அதேபோல், நரிப்பையூரில் உள்ள 3 மாலைக்கோவில்கள் பற்றியும், வேம்பாரில் உள்ள ஒரு மாலைக்கோவில் பற்றியும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.

 

culture

    
இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் ராஜகுரு , “மாலைக்கோவில் என்றால், போர், பூசல் போன்ற இன்னபிற காரணங்களால் இறந்து போன பெண் நினைவாக 4 நடுகல் நட்டு அதன் மேல் கோவில் எழுப்புவது. அதேபோல், நிரை கவர்தல், மீட்டல், பன்றி, யானையுடன் சண்டையிடுதல் போன்ற காரணங்களால் இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துவதற்கு பெயர் மாலைக்கோவில். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இந்த மாலைக் கோவில்களை பார்க்கலாம்”. என்றவர் தொடர்ந்து, “வட தமிழகத்தில் தீப்பாய்ஞ்ச அம்மன், சதிகல் என்று இந்த கோவில்கள் அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் இதற்கு மாலையடி, மாலைக்காரி, சீலைக்காரி என்று அழைப்பர். பெண் இறந்த பிறகு சாமியாக வழிபட்டுள்ளனர் அக்காலத்தில். நரிப்பையூரில் நாயக்கர் மற்றும் பாண்டியர் காலத்து மாலைக்கோவில்கள் இன்னமும் வரலாற்றை சுமந்து நிற்கும் எச்சமாய் நிற்கிறது. வேம்பாரில் உள்ள மாலைக்கோவில் என்பது, கணவனை நாகம் தீண்ட அவருடன் சேர்ந்து உயிர்நீத்த பெண்ணின் கதையை சுமந்து நிற்கிறது” என்கிறார்.

 

culture

    
தொல்லியல்துறை மற்றும் சுற்றுலா துறை முற்றிலும் கைவிடப்பட்ட இந்த கோவில்களையும், மரபுச் சின்னங்களையும் அரசு பாதுகாத்தால் நன்றாக இருக்கும். பழைமையான மரபுகள் பாதுகாக்கப்படுவது அவசியம்.!

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.