Skip to main content

ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் மீது புகார் செய்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

இந்திய தேசிய மக்களுக்கு அதிர்ச்சியும் தமிழ்நாட்டு மக்களுக்கு தலைகுனிவும் ஏற்படுத்திய பொள்ளாச்சி வன்கொடுமையாளர்களை பாதுகாக்கும் நோக்கோடும் நீதிகேட்டு தன் எழுச்சியோடு போராடும் தமிழக மாணவிகள், மாணவர்கள், பொது மக்களை அச்சுறுத்தும் நோக்கோடும் தி.மு.க. தலைவர் குடும்பத்தினர் மீதும், தமிழில் வெளிவரும், சமூக அரசியல் விழிப்புணர்வு வார இதழ் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள தமிழக அரசை கண்டித்து செந்துறை அண்ணாசிலை முன்பு இன்று (15-3-2019) வெள்ளி காலை 10.00 மணிக்கு அனைத்து கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

pollachi issue protest

 

pollachi issue protest



 

pollachi issue protest



ஆர்ப்பாட்டத்தில், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச. அ. பெருநற்க்கிள்ளி முன்னினிலை வகித்தார். தி.க. மாவட்டச் செயலாளர் விடுதலை. நீலமேகம், தெற்கு ஒன்றியச் செயலாளர் பூ. செல்வராசு, மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், மாவட்ட பொரியளர் அணி துணை அமைப்பாளர் சிவ. பாஸ்கர், மு. சித்ரா, சுமதி கருணாநிதி, ஜெயசுதா கருணாநிதி, சபாபதி, தேன்துளி, கோபி, நல்லுசாமி, கோவிந்தராசு, நல்லப்பன், கோடி,புலேந்திரன், தமிழ்மாறன், ராஜவேல், காமராஜ், இலங்கைச்சேரி பாலு, தமிழ்ச்செல்வன், துளார் ஜெய்க்குமார், புகழேந்தி, வி.சி.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி, கருப்புசாமி, மருவத்தூர் வெற்றி, செல்வகுமார், செ. க. ராஜேந்திரன், பாலமுருகன், காங்கிரஸ் ஒன்றியத் தலைவர்கள் செந்தில், பழனிச்சாமி, சிராஜேநிரன், ஏ. சந்திரசேகரன், பெரியசாமி ஆசிரியர், எம். கண்ணன், பி. ரெங்கநாதன், காமராஜ், பிச்சப்பிள்ளை, பழனிவேல், பெரியாசாமி, திக மண்டலச்செயலாளர் மணிவண்ணன், செந்தில், ஒன்றிய பொருப்பாளர்கள் சங்கர், மதியழகன், சேகர், முத்தமிழ்ச்செல்வன், ரத்தின. ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது