Skip to main content

சீமான், கமல், விஜயகாந்த் உள்ளிட்டோரின் சினிமா போஸ்டர்களுக்குத் தடை!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

Political actors banned from pasting movie posters
                                                      சந்திப் நந்தூரி

 

தமிழகத்தின் 16வது சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த் துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பொதுச் சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சிகளின் சின்னங்கள், பெயர்கள், போஸ்டர்கள் போன்றவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உட்பட பலவற்றில் எழுதப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகின்றன.

 

இதுதொடர்பான அறிவுரை கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், அதிமுக பிரமுகர் ஒருவர், என்னுடைய ஸ்வீட் கடையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். படத்தோடு கடை பெயரை வைத்துள்ளேன். அதனை எடுக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்ப, நிச்சயம் எடுக்க வேண்டும் என்றார். அரசியல் கட்சித் தலைவர்கள் பெயரோ, படமோ இருக்கக்கூடாது, மீறியிருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றார்.

 

மேலும் நாம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம், நடிகர் விஜயகாந்த், கமல், சரத்குமார், சீமான் போன்றவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களாக உள்ளார்கள். இப்போது, அவர்கள் நடித்த படம், இயக்கிய படங்கள் திரையரங்கில் வெளியாகிறது. அதற்கான போஸ்டர்ளை ஒட்டலாமா எனக் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் நடிகர்களாக இருந்தாலும் இப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள். அதனால், தேர்தல் விதிகள் அனைத்தும் அவர்களுக்குப் பொருந்தும். அதனால், அவர்களின் படங்கள் வெளிவருவதற்குத் தடையுள்ளது. போஸ்டர்கள் ஒட்டினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.