Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கொலையாளியைப் பிடித்த ஊர் மக்கள்! 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

Police arrested criminal in woman husband case
முருகன்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள செம்மனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தனது கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். 

 

இந்த நிலையில், தனது குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக  நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்திற்கு சென்ற சந்தோஷ் குமார், மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் இல்லாததால் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகைப்படங்கள், செல்போன் எண்களை பதிவிட்டு தேடி வந்ததோடு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். 

 

அதேசமயம், சந்தோஷ்குமாரின் குடும்ப நண்பரான முருகன் சம்பவத்தன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்தவர், திடீரென அன்று இரவே செம்மணங்கூர் திரும்பியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஊர் மக்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் அவரிடம் இன்னும் தீவிரமாக விசாரித்துள்ளனர். மேலும், அவர் கைகளில் காயம் இருந்ததைக் கண்ட ஊர்மக்கள் அதுகுறித்து கேட்டபோது, தனக்கும் தன் தாய்க்கும் ஏற்பட்ட தகாராறில் அந்த காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக ஊர் மக்கள் மக்கள் மற்றும் சந்தோஷின் உறவினர்கள் முருகனை அழைத்துகொண்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது முருகனின் தாய், அவன் காலையில் இருந்து இங்கு வரவில்லை. மேலும், அவனுக்கும் எனக்கும் தகராறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர். 

 

Police arrested criminal in woman husband case

 

இதனால் ஊர் மக்கள், முருகனை நேராக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முருகனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முருகன், “ஒரு வருடத்திற்கு முன்பு நான் கள்ளக்குறிச்சியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தபோது, சந்தோஷின் மனைவி சாந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அதன்பின் அங்கிருந்து அவர் சொந்த ஊரான செம்மணங்கூருக்கு என் காரில் வந்தார். அப்போது அவருக்கும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும், நாங்கள் அதிக நேரம் செல்போனில் பேசி பழகிவந்தோம். இந்தப் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.


அதன்பிறகு சந்தோஷ்குமார் சாந்தி தம்பதியரின் குடும்ப நண்பராக மாறினேன். முருகன் தன் கடைக்கு பொருட்கள் வாங்க வெளியூர்களுக்கு செல்லும் பொழுது, சாந்தியுடன் தனிமையில் இருந்துவந்தேன். ஊர் மக்கள் இது குறித்து சந்தேகம் அடையாமல் இருக்க சந்தோஷ்குமார் இருக்கும் பொழுது சாந்தியும், நானும் நட்பாக பேசி சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டோம். அதேசமயம், எங்கள் உறவுக்கு இடையூறாக  இருக்கும் சந்தோஷ்குமாரை கொலை செய்ய நான் திட்டம் தீட்டினேன். 


நேற்றுமுன் தினம் சாந்தியிடம் எப்பொழுதும் போல் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரது கணவர் சந்தோஷ்குமார், உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக சாந்தி கூறினார். அதனைத் தொடர்ந்து உடனடியாக கள்ளக்குறிச்சியில் இருந்து எனது டாட்டா ஏசி வாகனத்தை எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை சென்று அங்கு சந்தோஷ் குமாரைச் சந்தித்தேன். நான் தற்செயலாக அவரைச் சந்தித்தது போல் அவரிடம் காட்டிக் கொண்டு அவருடன் சகஜமாக பேச்சு கொடுத்து ஏதாவது ஓட்டலுக்குச் சென்று சாப்பிடலாம் என்று கூறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஓட்டலுக்கு செல்ல முடிவெடுத்து எனது வாகனத்தில் சந்தோஷ்குமாரை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி புறவழிச் சாலைக்கு வந்தேன். 


அங்கு சாப்பிட்டுவிட்டு,  கள்ளக்குறிச்சியில் உள்ள எனது வீட்டில் யாரும் இல்லை; அங்கு சென்று இருவரும் மது அருந்திவிட்டு மீண்டும் வாகனத்தில் அழைத்து வந்து செம்மணங்கூரி விடுகிறேன் எனக்கூறி அழைத்துச் சென்றேன். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு மதுபான கடையில் மது வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்று மது அருந்தினோம். ஒரு கட்டத்தில் அவர் போதையின் உச்சத்திற்கு சென்றபோது மது பாட்டிலை உடைத்து சந்தோஷ்குமாரின் கழுத்தில் குத்தி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுங்கச்சாவடிகளை கடக்காமல் பல்வேறு கிராமங்களைச் சுற்றி  கெடிலம் ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் சந்தோஷ்குமாரின் சடலத்தை வீசி பெட்ரோல் ஊற்றி எரித்தேன். ஊர் மக்கள் சந்தேகம்  அடையாமல் இருக்க நானும் சென்று அவர்களுடன் சேர்ந்து தேடுவதைப்போல் நடித்தேன் என கூறியுள்ளார். 


இதையடுத்து போலீசார் முருகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.