Skip to main content

தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - பிரதமர் மோடி சூசகம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

pm modi

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதே தமிழக அரசியல் வட்டாரங்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. இந்தநிலையில், நேற்று அஸ்ஸாமில் பேசிய மோடி, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, எப்போது அறிவிக்கப்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

அஸ்ஸாமில் ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசிய மோடி, "கடந்த முறை இந்த மாநிலங்களில், மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே இம்முறை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என யூகித்திருக்கிறேன். தேர்தல் ஆணையம் அதனை முறையாக அறிவிக்கும். தேர்தலுக்கு முன்பாக எத்தனை முறைமுடியுமோ அத்தனை முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறேன். மார்ச் 7 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் தேதிகள் வெளியாகலாம். அதுவரை எனக்கு நிறைய நேரம் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

 

இதன்மூலம் மார்ச் 7 ஆம் தேதி, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி வெளியாகும் என்பதை பிரதமர் மோடி மறைமுகமாக அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.