Skip to main content

படம் சிறுசா இருக்கு...சசிக்கலா பிறந்தநாளை புறக்கணித்த மா.செ!!

Published on 18/08/2018 | Edited on 27/08/2018

தமிழகந்தோறும் சசிகலாவின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர் டி.டி.வி.தினகரனின் அணியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர். இதில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் சசிகலாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இவ்வேளையில்,தன்னுடைய படத்தை நோட்டீஸில் சிறிதாக அச்சிட்டுள்ளார்கள் என சசிகலா பிறந்தநாள் விழாவையே புறக்கணித்துள்ளார் கட்சியின் மா.செ.!

 

sasikala

 

 

 

சிறையில் இருக்கும் சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் சன்னதியிலுள்ள ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகமும், அதனையொட்டிய அன்னதானத்தையும் ஏற்பாடு செய்திருந்தது டி.டி.வி.அணியின் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை. இதற்காக ப்ளக்ஸ் போர்டுகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு தடபுலாக வெளியிட்டிருந்தனர். அதில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மா.செ.வான கூத்தக்குடி உமாதேவன் படம் மட்டும் சிறிதாகவும், அம்மா பேரவையின் மாநில செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ-வுமான மாரியப்பன் கென்னடி மற்றும் அம்மா பேரவையின் மா.செ.வான ஊரவயல் ராமுவும் புகைப்படங்களும் பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. 

 

sasikala

 

 

 

இதில் கோபமடைந்த கட்சியின் மா.செ-வான கூத்தக்குடி உமாதேவன், " என்னுடைய படத்தை மட்டும் சிறுசாகப் போட்டுவிட்டு, மானாமதுரையை சேர்ந்த மாரியப்பன் கென்னடி படத்தை எவ்வாறு பெரிதாகப் போடலாமென", கட்சி நிர்வாகிகளிடம் மல்லுக்கட்டி விட்டு பிறந்த நாள் விழாவையே புறக்கணித்திருக்கின்றார். மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகளோ., " இது அம்மா பேரவையில் நடத்தப்பெறும் நிகழ்ச்சி.! கட்சியின் விதிப்படி தான் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் என்னுடைய படம் சிறுசாக வந்திருக்கின்றது. அதனால் நிகழ்ச்சியை புறக்கணிக்கின்றேன் என சொல்வது ஏற்புடையது அல்ல.!" என்கின்றனர். இருப்பினும், மா.செ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமலேயே யாக பூஜையையும், அன்னதானத்தையும் நடத்தி முடித்துள்ளனர்.

 

 

ஆக.! இந்நிகழ்வையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில்  மானாமதுரை எம்.எல்.ஏ-மாரியப்பன் கென்னடிக்கும், மா.செ.கூத்தக்குடி உமாதேவனுக்குமான கோஷ்டிப் பூசல் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கட்சியினரிடையேப் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.