Skip to main content

திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி; உள்நோக்கம் உடையது-பி.ஆர்.பாண்டியன் சாடல்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

திருவாரூர் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியளித்திருப்பது உள்நோக்கம் உடையது என  பி.ஆர்.பாண்டியன்  தெரிவித்துள்ளார்.

 

திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசையும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் தொடர் போராட்டங்கள் நடத்த போராட்ட குழு அமைக்கப்பட்டது.

 

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு கடும் கண்டனம் எழுந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் சார்பில் திருக்காரவாசல் கிராமத்தில் ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது. 

 

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், 

 

pr pandian

 

 

"திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு எதிர்ப்பு போராட்டக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக்குழு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. முதல் போராட்டமாக வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், போராட்டக்குழு ஏற்பாட்டின் பேரில் ஏராளமான விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈடுபடவுள்ளனர். 

 

உண்ணாவிரதப் போராட்டத் தினத்தன்று தொடர் போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும். திருக்காரவாசல் கிராமத்தின் பெரும்பகுதி இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. விவசாயிகள் குத்தகை அடிப்படையில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏதோ உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு இந்த திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என வேண்டுகோளாகவும், எச்சரிக்கையாகவும் தெரிவிக்கின்றோம்.

 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தங்கள் உயிரையும் இழக்க தயாராகி விட்டார்கள். குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் விளைநிலங்களை மாற்றும் திட்டத்திற்கு வேறு திட்டங்களுக்கு வழங்கமாட்டோம் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டம் குழு  வலியுறுத்தி உள்ளது, வலியுறுத்தி வருகின்றன."என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.