Skip to main content

தீபத்திருவிழா: திரும்பிய பக்கம்மெல்லாம் போலீஸ்... மக்கள் அவதி! 

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

People are suffering by restriction for deepam festival

 

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் தென்னியாவில் புகழ்பெற்றது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட மக்கள் மகா தீபத்தன்று திருவண்ணாமலை நகரில் வந்து குவிவார்கள். அன்றைய தினம் மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை ‘அண்ணாமலைக்கு அரோகரா..’ என பாடியபடி கிரிவலம் வருவார்கள். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் 2,663 அடி உயரம்முள்ள மலை உச்சிக்கு ஏறி சிவன் பாதம் எனக் குறிப்பிடப்படும் பகுதியை வணங்கிவிட்டுவருவார்கள். அந்த மலை உச்சியில்தான் மாலை சரியாக 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான நடைமுறை. தீபத்தன்று மட்டும் திருவண்ணாமலை நகரம், நகரத்துக்குள் நுழையும் 9 சாலைகள், கோவில் வளாகம், கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக மட்டும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பக்தர்கள் கலந்துகொள்ளாத தீபத்திருவிழா நடைபெறுகிறது. தீபத்திருவிழாவின் சாதாரண திருவிழாக்களில் பக்தர்களைக் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகம், பரணி தீபம், மகா தீபம் ஆகியவற்றைக் காண தடை என அறிவித்தது.

 

கடந்த ஆண்டு பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுவிட்டார்கள். சாலை மறியல் செய்து மாடவீதியை வலம்வர அனுமதி பெற்றவர்கள், இரவு கிரிவலமும் வந்தார்கள். இந்தமுறை அப்படி நடந்துவிடக் கூடாதென மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக தமிழ்நாட்டின் பிற மாவட்ட நிர்வாகத்திடமும், உங்கள் மாவட்டத்திலிருந்து பக்தர்கள் திருவண்ணாமலை செல்ல வேண்டாம் என அறிவியுங்கள் எனச் சொல்ல, பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், மக்களிடம் கார்த்திகை தீபம் காணவும், கிரிவலம் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் செல்லாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளது. வெளி மாவட்டம், வெளிமாநிலத்திலிருந்து திருவண்ணாமலை நகருக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கச் சொல்லி கடிதம் எழுதி, அதன்படி செய்யவைத்தது. இப்படி பல கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உள்ளூரிலும், வெளி மாவட்டத்திலும் செய்தது.

 

தீபத்திருவிழாவிற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மக்கள் அதிகளவில் வருவதால் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா மொழிகளில் நவம்பர் 7 முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை கிரிவலம் வரவும், அண்ணாமலையார் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யவும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் வர வேண்டாம் என வீடியோ வெளியிட்டுப் பரப்பியது. ஹோட்டல், மண்டபங்கள், சத்திரங்களில் வெளிமாவட்ட பக்தர்களைத் தங்கவைக்கக் கூடாது என அறிவுறுத்தி எச்சரித்துள்ளது.

 

இந்நிலையில், நவம்பர் 18 கார்த்திகை மாத பௌர்ணமி, நவம்பர் 19 தீபத்திருநாள் என்பதால் நவம்பர் 17 முதலே நகரத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது காவல்துறை. பக்தர்கள் யாரும் கோவில் பக்கம் வரக் கூடாது, கிரிவலம் வரக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

 

காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி உள்ள பொதுமக்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “கரோனோ பரவலைத் தடுக்க இப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சரிதான். ஆனால், அதேசமயம் உள்ளூர் மக்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பாதுகாப்பு என்கிற பெயரில் உள்ளூர் மக்களுக்குச் சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். கோயிலை சுற்றியே பூமார்க்கெட், காய்கறி மார்க்கெட், வர்த்த மண்டிகள், வியாபார நிலையங்கள் போன்றவை உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கும் அதிகமான கிராமத்தைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்வார்கள்.

 

அப்படி வருபவர்களை அங்கு செல்லவிடாமல் தடுப்பதும், நகர தெருக்களில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாதபடி லாக் செய்வதும் எங்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. நகரத்தின் பிரதான சாலைகள் முழுவதும் காவல்துறை வாகனங்கள் வரிசையாக நின்று போக்குவரத்து நெரிசலைத்தான் ஏற்படுத்துகின்றன. பக்தர்களை வர வேண்டாம் எனச் சொல்லிவிட்டு பின் எதற்காக இத்தனை கெடுபிடிகள். தீபத்திருவிழாவிற்காக மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு போலீசார் தேவையா” என்று தெரிவிக்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.