Skip to main content

பழனி முருகன் கோயில் அர்ச்சகரை மிரட்டும் இந்து அமைப்பினர்! தலைமையிடம் புகார் தெரிவிக்கும் அர்ச்சகர்கள்!!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றக்கூடிய பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்து வருகிறது. பழனியில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள்,  சிவாச்சாரியார்கள் நாள்தோறும் பூஜை முறைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மலைமீது உள்ள முருகன் கோவிலிலும் , மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி முருகன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியஆவுடையார் கோவில் போன்றவற்றில் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

 

Pazhani Murugan Temple threatens to Archagar; reporting to the leadership !!


கோயில் அர்ச்சகர்கள் பூஜை நேரங்களில் கோவில்களை சுத்தம் செய்து முறையாக பூஜைகளை செய்து வருகின்றனர். பழனியில் செயல்பட்டு வரக்கூடிய இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பழனியில் உள்ள மலை கோயில்களுக்கு நாள்தோறும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படி  கோயிலுக்கு செல்லும் இந்து அமைப்பினர் கோயிலில் பணியில் இருக்கக்கூடிய அர்ச்சகர்களை தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி மிரட்டக் கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருஆவினன்குடி கோவிலுக்கு சென்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவரும், இந்து ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவருமான சாமிநாதன் என்பவர் திருஆவினன்குடி முருகன் கோயிலில் பணியிலிருந்த அர்ச்சகர் ஒருவரை மிரட்டி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கோயிலில் பணியில் இருக்க கூடிய அர்ச்சகர்கள் முறையாக ஆகமவிதிகளை பின்பற்றுவதில்லை,  பூஜை முறைகள் சரிவர நடைபெறவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மிரட்டல் விடுத்து ஆதாயம் தேடி வருவதாக ஆதாரம் அர்ச்சகர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று மலைமீது செல்லக்கூடிய இந்து அமைப்பினரும் கோயில் அதிகாரிகளை மிரட்டியும்,  சிவாச்சாரியார்களை மிரட்டியும் ஆதாயம் தேடுவதாக ஆன்மிகவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்து அமைப்பின் தலைவர்களிடம் இது போன்ற நபர்களை குறிப்பிட்டு புகார் தெரிவிக்க போவதாகவும் பழனியில் உள்ள அர்ச்சகர்களும், ஆன்மிகவாதிகளும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மலைமீது உள்ள போகர் சன்னதியில் தகராறில் ஈடுபட்டு காவல்நிலையம் வரை புகார்கள் சென்று பின்னர் இந்து முன்னணி தலைவர்களால் சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் தொடர்ந்து பழனியில் உள்ள கோவில்களில் இந்து அமைப்பினரின் மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கோயில் இணை ஆணையர் கோவிலில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இதுபோன்று மிரட்டல் நபர்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.