Skip to main content

சம்பளத்தை உடனே வழங்கு, நீதிமன்ற உத்தரவுபடி வேலை கொடு... -நரிமணத்தில் தொழிலாளர்கள் முழக்கம்

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
 Pay the salary immediately; Work as court orders - Workers slogan

 

நாகை அருகே செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்தும், நிரந்தர வேலை வழங்காமல் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்தும் தொழிலாளர்கள் நிறுவன வாயிலில் முழக்கமிட்டனர்.

நாகை மாவட்டம், நாகூர் அடுத்துள்ள நரிமணம், கடலங்குடி பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தொடங்கியபோது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தவர்களின் விளைநிலங்களை பெற்றபோது, அவர்களின் வீட்டில் ஒருவருக்கு நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்குவதாக உறுதி அளித்தே நிலத்தை கையகப்படுத்தினர். 2007 -ம் ஆண்டு முதல் இதுநாள் வரை வெறும் 9 நபர்களுக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தாலும், அவர்களுக்கு நிரந்தரமான வேலை வழங்கப்படவில்லை.

தொழிலாளர்களுக்கு உடனடியாக நிரந்தர வேலை வழங்கவேண்டும் என திருச்சி தொழிலாளர் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்கவில்லை, நிலம் கையகப்படுத்தும்போது கொடுத்த உத்தரவாதத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர் என நிறுவனம் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

“கரோனோ காலத்தில் குடும்பம் நடத்தவே முடியாமல் தவிக்கிறோம், ஆனால் கடந்த மூன்று மாதங்களாகவே நிறுவனம் சம்பளம் கொடுக்கவில்லை, உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நிரந்தர வேலை மற்றும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என்கிறார்கள் தொழிலாளர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .