Skip to main content

''உலக தமிழர்களே பெருமை கொள்ளும் விழா''- தஞ்சை நகரை ஓவியத்தால் பிரமிக்க வைத்த கவின்கலை மாணவர்கள்  (படங்கள்)

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கால் விழாவால் ஜொலித்துக்கொண்டிருக்கும் மாநகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கும்பகோணம் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் தத்ரூபமாக வரைந்திருக்கும் வரலாற்று பின்னனியுடைய படங்கள் பலரையும் கவர்ந்திழுத்து வருகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக வரலாற்று சின்னமாம் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5 ம் தேதி காலை நடக்க இருக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், தன்னார்வலர்களும், மாணவர்களும், ஆன்மிகவாதிகளும் செய்துவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் கவின் கலை கல்லூரி மாணவர்கள் மக்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள நகரின் முக்கிய வீதிகளின் சுவர்கள் முழுவதும் வண்ண மயமான ஓவியங்களை தீட்டி காண்பவர்கள் பலரையும்  ஆச்சரியப்பட வைத்திருக்கின்றனர்.

ராசராச சோழன், ராசேந்திர சோழன், குந்தவைநாச்சியார், விவசாயிகள், விவசாய முறை, என பலவகையான படங்களை அசலாக வரைந்து, இவர்கள் தான் நம் முன்னோர்கள், நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என்பது போல, இந்த தலைமுறையினருக்கு காட்டி அசத்தியுள்ளனர்.

அதேபோல் தமிழறிஞர்கள், பழங்கால விளையாட்டுகள், ஐந்து வகை நிலங்கள், பெரிய கோயிலை சுற்றி இருக்கும் அகழியின் பழைய வடிவங்கள், நம் முன்னோர்கள் தானியங்களை சேர்த்து வைத்திருந்த மண்பாண்டங்கள், அவர்கள் பயன்படுத்தி,உரல், அம்மி, உலக்கை என அனைத்தையும் தத்ரூபமாக வரைந்து வைத்திருப்பது அந்த கால வாழ்க்கை முறைக்கு இழுத்து செல்கிறது.

சோழர்களின் வரலாற்றை மிக சுருக்கமாக மக்களிடம் கொண்டு சேர்த்த  பொன்னியின் செல்வன் வரலாற்று சம்பவங்களை நேரில் பார்த்தது போல ஓவியங்களை வரைந்து அசத்திவிட்டனர். சோழர்களின், தமிழர்களின் வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக உள்ளது. இதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்திட வழிவகை செய்யவேண்டும்." என்கிறார் கும்பகோணத்திலிருந்து வந்திருந்த கண்ணன்.

ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ள கும்பகோணம் கவின் கல்லூரி மாணவ மாணவிகளிடம் பேச்சு கொடுத்தோம்," இது எவ்வளவு பெரிய விழா, உலக தமிழர்களே பெருமை கொள்ளும் விழா என்பதால் எங்களுடைய பங்கும் குடமுழுக்கு விழாவில் இருக்க வேண்டும் என்று முன்பே திட்டமிட்டோம். ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது கலைஞர் எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அப்போது நகர் முழுவதும் குறிப்பாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரிய கோயில் வரை வரலாற்று ஆவணங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதில் மிகவும் பலரையும், குறிப்பாக மாணவர்களையும் கவர்ந்து இழுத்தது மாமன்னன் ராச ராச சோழன் தஞ்சைப்பெருவுடையார் கோயில் கட்டுமான பணிகள் நடப்பதை பார்வையிடுவது போலவும், விவசாய பணிகளை பார்வையிடுவதுபோலவும் வரைந்து அசத்தி இருந்தனர். அதுபோல் வித்தியாசமாக யோசித்தோம், முடிந்தவரை முன்னோர்களின் வாழ்க்கை முறையை வரைந்துள்ளோம்.

துவக்கத்தில் அனைத்து படங்களையும்  சாதாரணமாக வரைந்துவிட்டோம், மன்னர்களின் வரலாற்றுப் பின்னணியை வரையும்போது, அவர்களில் காலத்திற்கு சென்று யோசித்து, யோசித்து வரைந்ததால் காலம் எடுத்துக்கொண்டது. அந்தப் படங்களை வரையும் போதே நம்முன்னோர்கள் இப்படியா வாழ்ந்திருப்பார்கள், கலைக்கும் இறை நம்பிக்கைக்கும் இவ்வளவு முக்கியத்தும் கொடுத்திருக்கிறார்களே என நாங்கள் பரவசப்பட்டோம்,"  என்கிறார்கள் ஆர்வமாக.

கலையையும், இறைபக்தியையும் இருகண்களாக பாவித்து உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருந்துவரும் பெருவுடையார் கோயிலின் வரலாறும், அதன் பெருமையும் இன்னும் பல நூறு ஆண்டுகள் பேசும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.