Skip to main content

ஒரு கடைக் கூட வராத சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக பாயாசம் விற்கும் முதியவர்!

Published on 17/10/2021 | Edited on 17/10/2021

 

An old man who sells potion to customers in a market where not even a shop comes

 

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் வாரச்சந்தைகள் கூடும் நாட்கள் குழந்தைகளுக்கு கொண்டாட்டமான நாட்களாக இருந்தது. சந்தைக்கு போகும் தாய், தந்தைத் தங்களுக்கு ஏதாவது திண்பண்டங்கள் வாங்கி வருவார்கள் என்ற ஆவலும், ஆசையும் அந்த குழந்தைகளிடம் இருக்கும். தீபாவளி பொங்கல் காலமென்றால் சந்தையில் தான் புது துணிகள் வாங்கிக் கொடுப்பார்கள். இது எல்லாம் அனுபவித்தவர்கள் இப்போது நினைத்தாலும் மகிழ்கிறார்கள்..

 

காய்கறி, கறி, மீன், கருவாடு, துணிகள், கூடை, பாய், பாசி மணி, பவளம், முருக்கு உள்ளிட்டவை விற்பனை செய்யும் ஒரே இடமாக வாரச் சந்தைகள் இருக்கும். அதாவது இன்றைய சூப்பர் மார்க்கெட்டு போல.. ஒரு கிராமத்தில் சந்தை நாளில் சுற்றியுள்ள பல கிராம விவசாயிகளும், மக்களும் சென்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். பல கிராமங்களைச் சேர்ந்த உறவுகளின் நலன் விசாரிப்பு மையங்களாகவும் சந்தைகள் செயல்பட்டது.

 

An old man who sells potion to customers in a market where not even a shop comes

 

ஆனால், இப்போது அந்த பழமையான சந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பெரும் பெயர் பெற்ற சந்தைகள் கூட இன்று இருந்த இடம் தெரியாமல் உள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் சனிச்சந்தை மிகப் பிரபலமான சந்தை. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரை மேலே குறிப்பிட்ட அனைத்தும், இங்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரே ஒரு மீன் கடைதான் வருகிறது.

 

ஆனால் கூட்டமே கூடாத சந்தையில் பாயாசம் விற்பனை செய்ய ஒருவர் மட்டும் இன்று வரை வந்துக் கொண்டிருப்பது தான் வியப்பு. ஆனால் சனிக்கிழமை சந்தைக்கு போனால் பாயாசம் குடிக்கலாம் என்ற நம்பிக்கையில் பலரும் பக்கத்து கிராமங்களில் இருந்தும் தேடி வருவது இன்னும் சிறப்பு.

An old man who sells potion to customers in a market where not even a shop comes

 

"ஒரு பெரிய கிளாஸ் பாயாசம் 15 பைசாவுக்கு விற்கும் காலத்தில் இருந்து சனிக்கிழமையில பாயாசம் விற்பனை செய்து வருகிறேன். இப்ப சந்தையே இல்லை என்றாலும், நான் கடை போடுவேன், எனக்காக தேடி வந்து பாயாசம் குடிக்கிற மக்கள் வந்துகொண்டு தான் இருகிறார்கள். அவர்களை ஏமாற்ற விருப்பமில்லை. அவர்களுக்காகவே பாயாசக்கடை போட வேண்டியுள்ளது. இப்ப சின்ன ஒரு கிளாஸ் பாயாசம் ரூபாய் 5- க்கும், பெரிய கிளாஸ் பாயாசம் ரூபாய் 10- க்கும் விற்கிறேன். ஒரு நாள் முழுக்க விற்றால் ரூபாய் 100 முதல் 200 வரை கிடைக்கும். அது போதும் எனக்கு என்கிறார்" பாயாசக்கடை சின்னத்துரை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.