Skip to main content

75வது சுதந்திர தினத்தையொட்டி, ஜி.டி.என். கல்வி குழுமம் சார்பில் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

 

On the occasion of 75th Independence Day, G.T.N. A giant balloon flown on behalf of the education group!


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மேல்பகுதியில் 75- வது சுதந்திர தின விழாவையொட்டி, ஜி.டி. என். கல்வி குழுமம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இல்லந்தோறும் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூவர்ண தேசியக் கொடி வண்ணத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ராட்சச பலூனை பறக்கவிட ஏற்பாடு செய்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், ஜி.டி.என்.கல்வி குழும தலைவர் ரத்தினம், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாநகராட்சி மேயர் இளமதி, மாநகராட்சி துணை மேயர் ராஜாப்பா மற்றும் ஜி.டி.என். கல்லூரி இயக்குநர் துரை, திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருமான வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் பாலகுருசாமி ஆகியோர் கலந்துகொண்டு தேசிய கோடி வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ராட்சச பலூனை பறக்கவிட்டனர்.

 

அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகள், 21 பேரூராட்சிகளில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 710 வீடுகள், பழனி நகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 775 வீடுகள், கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உள்ள சுமார் 12 ஆயிரம் வீடுகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள 12 ஆயிரம் வீடுகள் மற்றும் 14 ஊராட்சிகளில் 306 ஊராட்சிகளில் 3,083 குக்கிராமங்களில் உள்ள சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 433 வீடுகள் என மொத்தம் சுமார் 5 லட்சத்து 93 ஆயிரத்து 22 வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் மத்திய அரசு வழிகாட்டு விதிமுறைகளின்படி, தேசியக் கொடியினை பறக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

 

அதன் அடிப்படையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மேல் பகுதியில் மூவர்ண தேசியக் கொடி வண்ணத்தில் ராட்சச பலூன் பறக்க விடப்பட்டு, பொதுமக்கள் ஆர்வமாகப் பார்த்து ரசித்து  சென்று வருகிறார்கள்

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தது ‘2024’ புத்தாண்டு; நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Born '2024' New Year Kolakala celebration all over the country

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதலே களைகட்டி வந்தது. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. நக்கீரன் வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

Next Story

ஆஸ்திரேலியாவில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
People welcomed the New Year with spectacular sky fun in Australia

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை ஆஸ்திரேலிய மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.