Skip to main content

திருச்சி சிவாஜி சிலை இனி திறக்க வாய்ப்பே இல்லையா? ஆதரவும் எதிர்ப்பும்!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

திருச்சி அருகே நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி சிவாஜி ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கரை ரவுண்டானாவில் சிவாஜி கணேசன் சிலை அமைத்து 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. சிலையை திறக்க வலியுறுத்தி ரசிகர்கள் பல்வேறு வகையில் முயன்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சிலையை உடனே திறக்க வேண்டுமென வலியுறுத்தி சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

 

 Is not the Trichy Shiva statue open anymore? Support and resistance !!

 

திருச்சி பாலக்கரை பகுதி சிவாஜி மிகவும் முக்கியமான இடம், சிவாஜி நண்பர்கள், அவர் வீடு, சிவாஜி திரைப்படம் எப்போதும் ஓடும் பிரபாத் திரையரங்கு என்று சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான பகுதியில் சிலை அமைக்க வேண்டும் என்று அவர் ரசிகர்கள் எல்லாம் இணைந்து பாலக்கரை ரவுண்டானாவில் நடிகர் சிவாஜி கணேஷனின் சிலை அமைக்கபட்டது. சிவாஜி கணேஷனின் ரசிகர்கள் சார்பில் இந்த சிலை அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. 

 

 

வெகு ஆண்டுகள் திறக்கப்படாமல் இருப்பது கண்டு ஆத்திரம் அடைந்த சிவாஜி ரசிகர் அடிக்கடி நள்ளிரவில் தீடீர் என சிவாஜியை மூடியிருந்த துணைியை ஆகற்றுவதும், பாலக்கரை போலிஸ் அதை மூடுவதும் தொடர் வேலையாக இருந்து வந்திருக்கிறது. 

 

statue

 

இந்த நிலையில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும் சிவாஜி ரசிகர்கள் கையெழுத்து வேட்டை எல்லாம் நடத்தினார்கள். ஆனாலும் துணி சுற்றப்பட்ட நிலையிலேயே இருக்கும் இந்த சிலையை, திறக்க கோரி அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும், ஏனோ திறக்கப்படாமலேயே உள்ளது. எனவே இந்த சிலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு, சிவாஜி சிலையை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சிவாஜி சமூக நலப்பேரவை மாநில துணை தலைவர் சிவாஜி சண்முகம் செய்திருந்தார்.

 

இந்த நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் பேசி போது… சிவாஜி சிலை திறப்பு அந்த பகுதி முஸ்லீம் மக்களுக்கும் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து இடையூராக இருக்கும் என எதிர்ப்பு தெரிவித்தால் தான் திறக்கப்படாமல் இருக்கிறது என்றார். 

 

statue

 

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் இப்ராஹீம்ஷா விடம் பேசிய போது.. அவர் சார்.. இது திருச்சி மாநகரின் மிக முக்கியமான இடம். இந்த இடத்தில் எப்போதும் ஜன நெருக்கடி அதிகமாக இருக்கும். அதுவும் இல்லாம் முஸ்லீம் மசூதி இருக்கிற பகுதியில் இந்த இடத்தில் சிலை திறப்பது தவறு என்று நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு சொல்லியிருக்கிறோம் என்றார். 

 

அந்த பகுதியில் சுமுகமான தீர்வு ஏற்படுமா...?  சிவாஜி சிலை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போதைய செய்தி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.