Skip to main content

யாரும் பசியோடு உறங்கக் கூடாது... சாமானியர்களின் நெருக்கடியை சமாளித்த டிஎஸ்பி..!!!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

"கல்வி, அதிகாரம், ஆளுமை இருந்தால் மட்டும் போதாது.! மனிதநேயம் இருந்தால் மட்டுமே அவன் முழு மனிதனாக முடியும்," என்பதற்கிணங்க கரோனா ஊரடங்குக் காலத்தில் தன்னுடைய காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட எளியோர்களை தேடி சென்று வலிய உதவி வருகின்றார் டிஎஸ்பி ஒருவர்.

 

 No one should sleep hungry ... DSP dealt with the crisis of luggage .. !!!


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு, அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு மற்றும் சாக்கோட்டை காவல் நிலையங்களையும், மகளிர் காவல்நிலையம் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையத்தினையும் உள்ளடக்கிய காரைக்குடி துணைச்சரகக் காவல்துறையின் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருபவர் அருண். 2016ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர், அடிப்படையில் கால்நடை மருத்துவர். துவக்கத்தில் கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் பணியாற்றியிருக்க, 2019ம் ஆண்டு காரைக்குடி காவல்துறை துணைச்சரக டிஎஸ்பி-யாக மாற்றலானார். பதவியேற்றக் காலம் தொட்டு, தன்னை சந்திக்க வரும் புகார்தாரர்களுக்கே சிறுசிறு உதவிகளை செய்தவர் தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் மனித நேயத்தில் மிளிர்கின்றார்.
 

nakkheeran app

 

 No one should sleep hungry ... DSP dealt with the crisis of luggage .. !!!


 

கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சாலையோரம் வசித்தவர்கள், சாப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அம்மா உணவகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி பசியாற்றும் சேவையை துவக்கியது காரைக்குடி காவல்துறை துணைச்சரகம், அதேவேளையில், கட்டிடத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர்கள், சலவைத் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், செருப்பு தைப்பவர்கள், பிளாஸ்டிக் பொறுக்குபவர்கள், தினக்கூலிகள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதியோர்கள் மற்றும் திருநங்கைகள் என தனது காவல்துறை துணைச்சரகத்திலுள்ள எளியோரைக் கண்டறிந்து, காரைக்குடி வருவாய் துறையினருடன் இணைந்து அவர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்புகள் மற்றும் காய்கறிகளை டன் கணக்கில் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 No one should sleep hungry ... DSP dealt with the crisis of luggage .. !!!

 

இது இப்படியிருக்க, "நாங்கள் இங்குள்ள அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றோம். ஊரடங்கிற்கு பின் ஊர் செல்ல இயலாத நிலை." என டுவிட்டரில் மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் மாணவர்கள் பதிவிட அவர்களை தேடிசென்று ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார். அதுபோல் வெளி மாநிலத்திலிருந்து தொழிலுக்காக இடப்பெயர்ச்சியாகி காரைக்குடி வந்த வெளி மாநிலத்தார்கள் 300 நபர்களுக்கு தேவையான உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மூட்டை கணக்கில் வழங்கி பசியாற்றியது.. மனிதநேயம் ஒருபுறம் இருந்தாலும், சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கவனத்தை செலுத்தி இதுவரை 506 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த காரைக்குடி துணைச்சரக காவல்துறை, கரோனா குறித்த பல விழிப்புணர்வுகளை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.