குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா வரை நிலவுவதால் தமிழகத்தில் அநேக இடங்களில் அடுத்து 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும் குமரிக்கடல்,மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு டிசம்பர் 5,6,7 தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.