Skip to main content

வழிவிடாத பக்கத்து வீட்டார்... இறந்தவர் உடல் 3 நாட்களுக்கு பின்னர் தகனம்..!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

neighbour not give a way so after 3 days later the body was cremated

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மயானச் சாலைகள் என்பது ஆக்கிரமிப்புகளால் தடைபட்டிருப்பதால், பல இடங்களில் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, சேந்தாக்குடி ஊராட்சி கீழையூர் வெள்ளைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் துரைச்சாமி(43).

 

விவசாயியான இவர், நேற்று முன்தினம் (06.04.2021) இரவு 7 மணிக்கு உயிரிழந்தார். அவரது உறவினர்கள் துக்கம் விசாரித்தனர். மேலும் நேற்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக  சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, அருகில் உள்ள வீட்டினர் சடலத்தை தூக்கிச் செல்ல வழிவிடாததால், இன்றுவரை சடலம் அவரது வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டது. 

 

neighbour not give a way so after 3 days later the body was cremated

 

இந்த நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்று, கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் மற்றும் போலீசார், இறந்தவரின் உறவினர்களிடம் சமதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிகாரிகள் முன்னிலையில் சடலத்தை தூக்கிச் செல்ல உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் துக்க வீட்டில் ஒரு சிலர் தவிற வேறு உறவினர்கள் கூட இல்லை. 

 

இதேபோல சாலை வசதி இல்லாத பல கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஒவ்வொரு இறப்பின்போதும் இப்படி அவதிப்படுவது வழக்கமாக உள்ளது. அதனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் அதிகாரிகளே சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.