தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வான மீனம்பட்டி அரசு பள்ளி மாணவிகள்!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த மீனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள், சென்னையில் நடைபெறவுள்ள குழந்தைகள் தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வுபெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டிச. 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 25-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடிற்கு கறம்பக்குடியை அடுத்த மீனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பயணச் செலவிற்கு கறம்பக்குடி ரோட்டரிசங்கம் சார்பல் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி, ரோட்டரி சங்கத் தலைவர் கர்ணன், வழிகாட்டி ஆசிரியர் எம்.ஸ்டாலின்சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இரா.பகத்சிங்