Skip to main content

’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில்  கமல்ஹாசன் பேச்சு

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான  வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திற்கு, புயலடித்த சமயத்தில் வந்து பார்வையிட்டு சென்றார் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.

 

k

 

அப்போது அங்குள்ள மீனவர்களுக்கு மீன்பிடி வலை வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்து விட்டு சென்றார். அதன்படி 21 ம் தேதி கட்சி துவங்கி ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் நிவாரண உதவியாக தான் கொடுத்த வாக்குறுதி படி 159 மீனவர்களுக்கு வலைகள் வழங்க  வந்திருந்தார்.

 

வெள்ளப்பள்ளம்  கடற்கரை ஓரத்தில் பிரமாண்டமாக  மேடை அமைத்திருந்தனர் மக்கள் நீதி மய்யத்தினர். இயற்கை சூழலோடு  கடற்கரைக் காற்றில் அமைக்கப்பட்டிருந்த  அந்த நிவாரணம் வழங்கும் விழாவிற்கு கமல்ஹாசன்  வருவதற்கு முன்பு நடிகை ஸ்ரீப்ரியா கூட்டத்தை  நெறிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். 

 " கஜா புயலின் பாதிப்புகள் குறித்தும், அரசின் அலட்சியப்போக்கு குறித்தும், மக்கள் படும் இன்னல்கள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கிராம சபைக்கூட்டம் குறித்தும்,  மக்கள் நீதி மையம் செய்யப்போகும் செயல் திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். பிறகு  கமல்ஹாசன் வந்ததும் அவர்  மேடையிலிருந்து இறங்கி  திருவாரூரில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றுவிட்டார்.

 

k

 

  கமல்ஹாசன் வருவதற்கு என்று தனியாக கடற்கரையில் செம்மண்ணால் சாலைகள் அமைத்திருந்தனர், கமல் வருகையின் போது சிறுவர்கள் முன்டியடித்து ஓடினர். 

 

விழாவில் பேசிய கமல்ஹாசன், "நாகப்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் மட்டும்  உறவினர் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் எனக்கு உறவினர். குறிப்பாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வலுவான உறவினர்கள். நான் கடல் மீன்கள் படத்தின்போது வலை விரித்து மீன் பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்தவன். எனக்கு மீன்பிடித் தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தெரியும். நான் மீனவர்களின் சீடன். சினிமாவிற்காக மட்டுமல்ல தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் நானே வலை விரித்து மீன்பிடித்து அவர்களது கஷ்டங்களை அறிந்துக் பார்த்தவன்.

 

 மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை, மரங்கள் அகற்றப்படவில்லை, பிரிந்துபோன கூரைகள் அமைக்கப்படவில்லை, வரும் வழியில் மரங்கள் வெட்டி அகற்றப்படாமல் கிடந்ததை பார்த்து கலங்கியபடியே வந்தேன். கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் பிரிக்கப்பட்ட காக்கா கூடுகளை போல் கிடக்கிறது. அரசு என்ன செய்தது, செய்துகொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஓரு செய்தியை கேள்விப்பட்டேன் அது உண்மையாக இருக்கக் கூடாது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தில் பாதியை சுருட்டி விட்டார்கள் என கேள்விப்பட்டேன். இதில் கூடவா அவர்கள் ஊழல் செய்ய வேண்டும்.

 

k

 

வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் கொடுப்பது கொடையோ,தர்மமோ அல்ல, பட்டகடன் ஆகும். மக்கள் நீதி மையம் சார்பில் கொடுக்கப்படும் பொருட்களும், நிவாரண உதவிகளும் ,நலத்திட்ட உதவிகளும், நேர்மையான முறையில் சம்பாதித்து முழுமையாக வரி செலுத்தி வெள்ளை பணத்தில் வாங்கியது.  கருப்பு பணத்தில் வாங்கியது அல்ல.

 

 பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை என்னால் முடிந்த அளவு மேற்கொள்வேன் தேர்தலுக்காக கூறப்படும் செய்தி அல்ல மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம்". என்றார்.

 

கமல்ஹாசன் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திற்கு வரும்போது  அவரது காரை மறித்த விவசாயிகள், விவசாய பெண்கள் "கமல்ஹாசன் மீனவர்களை மட்டும் தான் சந்திப்பாரா, விவசாயிகளை சந்திக்க மாட்டார், இந்த நாட்டில் விவசாயிகள் அனாதைகளாக மீனவர்கள் மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களா என ஆக்ரோசமாக கேள்வியை முன்வைத்து கேட்டனர்.

 

 அதற்கு விழா மேடையில் பதிலளித்துப் பேசிய கமல்ஹாசன்" விவசாயிகளை நான் சந்திக்கவில்லை என கூறியிருக்கிறார்கள்.  அவர்களும் என்னுடைய உறவுகள்தான் உணவில்லாமல் மீனை மட்டும் சாப்பிட முடியாது, சாப்பிட்டு உயிர்வாழ முடியாது." என்று பதில் கூறிப்பேசி முடித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கமல்ஹாசனின் வருகை வேதாரண்யம் தொகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் அழைத்தது நான்தான்” - கமல்ஹாசன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Kamal Haasan says I have already spoken to Vijay who has entered politics

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு இன்றைய நாளோடு 7ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க சென்னையில் இன்று (21-02-24) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார். 

அதன்பின், கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிலேயே 40 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாக கூட இருக்கவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக்கொண்டே இருப்பேன். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது. 

நாட்டு மக்களிடம் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சரியான வரிப்பகிர்வு அவசியம்” என்று பேசினார்

அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தான் கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான்” என்று கூறினார்.