Skip to main content

ஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019


ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த தடய அறிவியல் நிபுணர், சிபிசிஐடி காவல்துறை அளித்த தடயங்களில் படிந்திருந்தது கோகுல்ராஜின் ரத்தம்தான் என்பதை உறுதி செய்து, நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 18, 2019) சாட்சியம் அளித்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம்  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக, சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

murder case


கைதானவர்களில் இருவர் தவிர, மற்ற 15 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் சாட்சிகள் விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர். நீதிபதி இளவழகன் முன்னிலையில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், அரசுத்தரப்பு சாட்சிகளிடம் இன்று (பிப்ரவரி 18, 2019) மீண்டும் விசாரணை நடந்தது. முதல் சாட்சியாக திருவள்ளூர் மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் நளினா ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவருடைய சாட்சியம்.


''கோகுல்ராஜின் சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக டிரவுசர் (பேன்ட்) (1), சட்டை (2), பணியன் (3), ஜட்டி (4), கிழிந்த நிலையில் கிடந்த பணியன் துண்டுகள் சில  (5), சடலம் கிடந்த இடத்தில் ரத்தம் தோய்ந்திருந்த சில கற்கள் (6) ஆகிய ஆறு தடயங்களை காவல்துறையினர் தடய அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவற்றில் 3, 4, 5 ஆகிய மூன்று இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள் அவற்றின் தன்மையை இழந்து இருந்தன.

 

murder case


மேலும், 1 மற்றும் 6 ஆகிய இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள் மனித இனத்தைச் சார்ந்ததுதான் என்றாலும், அவை என்ன வகை என்று எங்களால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இனம் 2ல் (சட்டை) படிந்திருந்த ரத்தக்கறை, மனித ரத்தம்தான். அது, 'ஓ குரூப்' வகையைச் சார்ந்தது எனவும் கண்டறியப்பட்டது. இந்த வகையும், இந்த வழக்கில் தொடர்புடைய இறந்த நபரின் ரத்த மாதிரியும் இரண்டும் 'ஓ குரூப்' என்ற ஒரே வகையைச் சேர்ந்தது என்றும் ஆய்வில் தெரிய வந்தது,'' என்றார் நளினா.

 


இதையடுத்து ஓமலூரைச் சேர்ந்த ரங்கநாதன், பாஸ்கரன், செல்வமணி என்ற பெண், மாதேஷ் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். இவர்களில் அரசுத்தரப்பு சாட்சியமான மாதேஷ் மட்டும் பிறழ் சாட்சியம் ஆனார். அவரிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி குறுக்கு விசாரணை நடத்தினார். இத்துடன் இன்றைய சாட்சிகள் விசாரணை முடிந்தது. இதையடுத்து சாட்சிகள் விசாரணையை நாளை மறுதினத்திற்கு (பிப்ரவரி 20ம் தேதி) ஒத்திவைத்தார் நீதிபதி இளவழகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியான பகீர் தகவல்; விசிக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை சோதனை

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Flying Force Test at vck Administrator's House

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி, அமைச்சர் சிவசங்கர் ஆகியோரின் கார்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சேலத்தைச் சேர்ந்த அமமுகவின் மாவட்டச் செயலாளர் காரில் இருந்து ஆவணம் இல்லாத 16.85 லட்சம் ரூபாய் இன்று பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகே விசிக கட்சி நிர்வாகி பெருமாள் என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில்2.5 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தலைமை காவலர் புவனேஸ்வரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

தேர்வு இறுதி நாளில் மாணவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; காவல்நிலையத்திற்கு குவியும் வலிறுத்தல்கள்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Video released by students on the final day of the exam; Convulsions flock to the police station

பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடந்து வரும் சூழலில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்த கையோடு பிரியாணியுடன் மது அருந்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காடையாம்பட்டி அருகே 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த நாள் அன்று பள்ளி மாணவர்கள் சிலர் ஊரில் ஒரு பகுதியில் கூட்டாக அமர்ந்து பிரியாணியுடன் மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுபோதையில் தள்ளாடியபடி படித்த பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி முன்பு நின்று குரூப்பாக செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றன்ர். இதனைக் கண்டு அதிர்ந்த அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மது அருந்திய மாணவர்களை பிடித்து கண்டித்து எச்சரித்து அனுப்பினர்.

சீருடையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என்று விசாரிக்குமாறு ஓமலூர் காவல் நிலையத்திற்கு வலியுறுத்தல்கள் குவிந்து வருகிறது.