Skip to main content

195 பேரிடம் பல கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் மனு! 

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Multi-crore fraud against 195 people; Victims petition the collector!

 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசிக்கும் மதுரையைச் சேர்ந்தவர் ராஜசிவப்பிரகாசம். இவர், கூட்டுறவு குடிசைத்தொழில் சங்கத்தின் உசிலம்பட்டி கிளை தலைவராக உள்ளார் எனச் சொல்லப்படுகிறது. இவர், கடந்த 5 ஆண்டுகளாக 195 நபர்களிடம் தன்னை கூட்டுறவுச் சங்கத் தலைவர் என்றும், ஒரு தனியார்ப் பள்ளியின் நிர்வாகி என்றும் ஏமாற்றி வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 6 கோடியே 89 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.

 

இதுகுறித்து பணம் தந்து ஏமார்ந்தவர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்தப் புகார் மனு அளித்தவர்களில் ஒருவரான, கண்ணன் என்பவர், “இதுவரை வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் 2020ஆம் வருடம், நவம்பர் மாதம் 5ஆம் தேதி வழக்குத் தாக்கல் செய்து, 195 நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது. மேலும், 16.9.2020 அன்று 195 நபர்களும் விசாரணைக்கு ஆஜராகச் செய்தனர். 195 நபர்களும் கோர்ட்டில் ஆஜராகியும் எந்த பலனும் இல்லை. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து, சுமார் 7 கோடி ரூபாயை மோசடி செய்த ராஜசிவப்பிரகாசம் என்பவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார். இவர் அதிமுக பிரமுகர் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.