Skip to main content

“இந்த பணம் எனக்கு மட்டும் அல்ல, மற்ற அதிகாரிகளுக்கும்...” - கறாராக லஞ்சம் கேட்டவர் கைது!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

This money is not only for me, but also for other officials

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது நைனார்பாளையம். அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்துவருபவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் (36). இவர், தனது தந்தை பெயரில் இருந்த நிலத்தை தன் சகோதரர்கள் மூவருடன் பாகப்பிரிவினை செய்துகொண்டார். இதையடுத்து, மூவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலம் பாகப்பிரிவினையைப் பதிவும் செய்துகொண்டனர். இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை பத்திரத்தின்படி நிலத்தை தங்கள் மூவரது பெயருக்கும் பட்டா மாற்றம் செய்து தருமாறு ஜெயராமனும் அவரது சகோதரர்களும் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர்.

 

ஆனால் முறைப்படி நிலத்தை அளவு செய்துகொடுக்க வேண்டிய நில அளவையர் யாரும் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. அதனால் கடந்த 15ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று விவரம் கேட்டுள்ளார் ஜெயராமன். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் நில அளவையர் சூர்யா என்ற பெண்மணியைப் பாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி சர்வேயர் சூர்யாவை சென்று பார்த்துள்ளார் ஜெயராமன். அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு இணைய வழியில் விண்ணப்பித்ததற்கான ரசீதையும் காட்டியுள்ளார்.

 

அதை எல்லாம் சரி பார்த்த சூர்யா, உங்கள் சகோதரர்கள் மூன்று பேரும் தலா 8000 ரூபாய் வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் நிலத்தை அளவு செய்து பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார் சூர்யா. நில அளவை செய்து பட்டா மாற்றம் செய்ய இவ்வளவு தொகையா? என ஜெயராமன் கேட்டபோது, இந்தப் பணம் எனக்கு மட்டும் அல்ல. மற்ற அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜெயராமன் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்துகொண்டு வருவதாகக் கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார். தங்களுக்குரிய நிலத்தைப் பட்டா மாற்றம் செய்துகொடுக்க வேண்டியது வருவாய்த்துறையினரின் கடமை. அப்படியிருக்கும்போது 24 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் தர வேண்டும் என கறாராக கேட்டதை ஜெயராமனாலும் அவரது சகோதரர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள காவல்துறை ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் சென்று புகார் அளித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று (24.11.2021) மாலை 6 மணியளவில் சூர்யா மற்றும் அப்பகுதி கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை ஜெயராமன் சந்தித்தார். அப்போது ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஜெயராமன் அவர்களிடம் கொடுத்தபோது, உடன் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து நில அளவையர் சூர்யா, உதவியாளர் சுசீலா ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். பட்டா மாற்றம் செய்ய பெண் நில அளவையர், கிராம உதவியாளர் இருவரும் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.