Skip to main content

மோடிக்கு விருச்சிக ராசி; தாமிரபரணி மகா புஷ்கர விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் -தமிழிசை சவுந்தரராஜன்!!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

நெல்லை தாமிரபரணி மகாபுஷ்கர விழா அக் 11-ல் தொடங்குகிறது. அதற்காக நெல்லை வந்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லை குறுக்குத்துறையின் தைப்பூச மண்டப பகுதியில் தூய்மைப் பணியை துவக்கியவர், அவரும் அந்தப் பணியில் ஈடுபட்டார். அவருடன் பா.ஜ.க. தொண்டர்களும் வந்திருந்தார்கள். பின்னர் பேசிய தமிழசை,

 

tamilisai

 

தாமிரபரணி தீர்த்தவாரி பெருவிழா விருச்சிக ராசியில் நடக்கிறது. விருச்சிக  ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாவது சிறப்பு. பிரதமர் மோடியின் ராசி விருச்சகம். எனவே பிரமர் மோடியின் விருச்சிக ராசியில் தீர்த்தவாரி மகா புஷ்கர விழா நடப்பதால் பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தைப் பூச மண்டபகப் படியும், குறுக்குத்துறை மண்டபமும் மிக ஆழமானது. சுழல் பகுதி என பல்வேறு காரணங்களைக் கூறி அரசு தடைவிதித்துள்ளது. அனைத்து படித்துறைகளிலும் தீர்த்தவாரி விழா நடக்கும் என்று அரசு அறிவிக்க வேண்டும். ஆகம விதியைச் காட்டி தீர்த்தவாரி யாகம் நடத்த தடைவிதிக்கக் கூடாது. நீண்ட காலமாக சுவாமி, மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்து வருகிறது. இயற்கை சார்ந்த மத உணர்வோடு நடக்கும் பெருவிழாவை வேறு காரணங்களோடு ஒப்பிடக்கூடாது. அரசு தடை செய்யவும் கூடாது. தீர்த்தவாரி பெரு விழாவிற்காக படித்துறை தூய்மையே சேவை என்ற பணி செய்து வருகிறோம். விழாவில் முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.

 

tamilisai

 

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் சுப.நாகராஜன் மாநில விவசாய அணி செ.கணேஷ்குமார் ஆதித்தன் மாவட்ட தலைவர், குமரேச சீனிவாசன் போன்றவர்கள் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.