Skip to main content

திரிபுராவில் வெட்கமற்ற முறையில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார் மோடி : முத்தரசன் பேட்டி

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
mutharasan

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது எனவும், மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு வடகோவை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காவிரி நதிநீர் பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து வரும் வகையில் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கர்நாடக தேர்தலில் அரசியல் ஆதயாத்திற்காக நடுநிலையாக இல்லாமல், குறுகிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது எனக்கூறிய அவர், மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.  காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தொடர் கடையடைப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முடக்கம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென அவர் கூறினார். 

 

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் செய்கிறது எனக்கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


திரிபுராவில் ஆட்சி அதிகாரம், பண, படை பலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது எனவும், பிரிவினைவாதத்திற்கு எதிரான பேசும் மோடி, திரிபுராவில் வெட்கமற்ற முறையில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் கம்யூனிசத்தை ஒரு போதும் அழிக்க முடியாது எனவும், திரிபுரா மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அவர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் என முத்தரசன் தெரிவித்தார்.

 

எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத அரசாக உள்ளதாகவும், மக்கள் ஆதரவையும், தங்களது சட்டமன்ற உறுப்பர்களின் ஆதரவையும் இழந்து விட்டது எனவும்,ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது எனவும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

 

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த முத்தரசன், தமிழகத்தின் உரிமையை யார் பறித்தாலும் கடுகளவு கூட விட்டு கொடுக்க கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு என கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.