Skip to main content

ஈரோட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’திட்டத்தைத் துவங்கி வைத்த அமைச்சர்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Minister launches 'Makkalai thedi Maruthuvam' project in Erode

 

ஈரோட்டில் பெரியசேமூர் தென்றல் நகரில் 24ந் தேதி மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மருத்துவ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மருத்துவத்துறையின்  சார்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு இருந்தாலும் பொதுமக்களுக்குக் குறிப்பாக நோயாளிகளாக இருக்கக்கூடியவர்கள் பயன்படுகிற வகையிலே அவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

 

அனேகமாக இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு புதிய திட்டம் இது. இதையெல்லாம் இன்றைக்கு அல்ல முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே பத்து வருட காலமாகத்  திட்டமிட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு இடத்திலும் அதற்கான வாகனத்தை ஏற்பாடு செய்து ஒவ்வொரு வாகனத்தையும் இரண்டுபேர் மூன்று பேர் சென்று வீடு வீடாக அவருக்கு யார் யாருக்கு மருந்து கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்கிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் போய் மருந்து கொடுப்பார்கள் இடையிலே அவர்கள் ஒரு மாதம் சென்ற பிறகு நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து அவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொண்டு மருந்துகளைப் பெற வேண்டும். ஒருவேளை பரிசோதனை அவசியம் இல்லை என்று சொன்னால்  நம்முடைய செவிலியர்களை நேரடியாக நோயாளிகள் வீட்டிற்குச் சென்று அந்த மருந்தைக் கொடுத்துவிட்டு வருவார்கள்.

 

ஒரு நோய்க்காக மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் சிரமத்தின் காரணமாக, சங்கடங்களையும் வேறு விதமான நோய்களையும் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. அதை எல்லாம் முழுமையாக இப்பொழுது தடுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல் வாழ்வைக் கொடுக்கிற திட்டமாக அமைகிறது. ஈரோடு மாநகரில் மட்டும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 530 மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5277 பேர் பல்வேறு இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 182 பேர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1521 பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 532 பேர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள். மக்கள் தேடி மருத்துவத் திட்டம் மூலம் இந்த நபர்கள் முழுமையாகப் பயனடைவார்கள்” என்றார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்