Skip to main content

சைலோ மூலம் நெல் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை!

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

Minister Chakrabarty consults with Australian company on paddy protection through silo!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலகத்தில் ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது உணவு மற்றும் வழங்கல்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூரில் ரூபாய் 64.27 கோடி செலவில் சைலோ மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை சரிவர கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிப்பு செய்யாமல் வெறும் 5 ஆயிரம்  மெட்ரிக் டன் மட்டுமே சேமித்து வந்தனர். 

 

இந்த நிலையில்தான், கடந்த ஓராண்டுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதை தொடர்ந்து தான் அமைச்சர் சக்கரபாணியும், தமிழகம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழங்களை ஆய்வு செய்தார். அப்போதுதான் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூரில் இருக்கும் சைலோ நெல் சேமிப்பு மையம் சரிவர செயல்படவில்லை என்று தெரிந்தது. அதைதொடர்ந்து தான் அமைச்சர் சக்ரபாணியும் இதனை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

 

இந்த நிலையில்தான் தலைமைச் செயலகத்தில் இன்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர்  சக்கரபாணி  மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உணவு தானியங்கள் பதப்படுத்தும் சைலோ (SILO) தொழில் நுட்பத்தில் மிக அனுபவம் பெற்ற Kotzur PTY LTD. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ கொட்சூர் மற்றும் NTC குழுமத் தலைவர் முனைவர் சந்திரமோகன் மற்றும் இந்திய SILO தயாரிப்பு நிறுவனமான NTC Tanshu-வின் இயக்குனர்கள் நரேஷ் கௌஷிக், சக்திவேல், டேவிட் (ஆஸ்திரேலியா) ஆகியோர் சந்தித்தனர். 

 

அதன்பின் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உணவு தானியங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் முறையில் உள்ள சவால்கள் மற்றும் சைலோ மூலம் முழுமையாக சேமித்து வைப்பதற்கு நிரந்தர தீர்வுக்கான ஆலோசனையும் நடைபெற்றது

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.