Skip to main content

இலங்கைத் தமிழர்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Minister and officials who provided welfare assistance to the Sri Lankan Tamils camp

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரை ஒட்டியுள்ள பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அவர்கள் இந்தப் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்துவருகிறார்கள். அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் ராம்குமார், வட்டாட்சியர் சிவகுமார், செந்தில்குமார் மற்றும் சமூகநல வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

அதேபோல், 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 240 பயனாளிகளுக்கு உடைகள், 97 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், 14 ஆயிரம் மதிப்பீட்டில் அப்பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எரிவாயு இணைப்பு, சமூக மேம்பாட்டு நிதியாக 75,000 என நான்கு லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கினார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு நபருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அரசாணையும் வழங்கினார் அமைச்சர். அப்போது பேசும்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 200 நாட்களில் செய்துள்ள சாதனைகள் குறித்து பேசினார்.

 

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே கரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் தமிழக முதல்வரின் கடும் உழைப்பின் மூலம் கரோனாவை ஒழித்தார். தமிழக மக்களின் நலனுக்காக மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் உதவித்தொகை, இப்படி பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதை உடனுக்குடன் செயல்படுத்திவருகிறார். ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

இன்னும் இதுபோன்று பல்வேறு வகையான மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக முனைப்போடு பாடுபட்டுவருகிறார் தமிழக முதல்வர்” இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ராமு, இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, வழக்கறிஞர் அணி சரவணன் உட்பட ஏராளமான திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.