Skip to main content

ஒரு லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம்; கள்ளச்சாராயம் அமோக விற்பனை 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Massive sale counterfeit liquor Kallakurichi district

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கல்வராயன் மலை. சேலம், திருவண்ணாமலை, மாவட்டங்களை, ஒட்டி அமைந்துள்ளது இந்த மலைப்பகுதியை பயன்படுத்தி இங்கு கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வது என்பது பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தியாகும் கள்ளச்சாராயம் பல்வேறு மாவட்டங்களுக்கும் கடத்தப்படுவது ஒரு தொடர்கதையான சம்பவங்கள்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அவ்வப்போது மலைப்பகுதிக்கு சென்று ரைடு நடத்தி கள்ளச்சாராய ஊரல்களை அழிப்பதும் கள்ளச்சாராயம் கடத்துபவர்களை கண்டறிந்து கைது செய்வதும், அதன் பின் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கள்ளச்சாராயத்தை மட்டும் இதுவரை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு உதாரணமாக சமீபத்தில் இந்த மலை கிராமம் ஒன்றில் கள்ளச்சாராய விற்பனை செய்ய ஊர் மக்கள் மத்தியில் ஏலம் விடும் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் மலையை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் சாராய வியாபாரி ஒருவர் மது பிரியர்களை கவரும் வகையில் ஒரு லிட்டர் சாராயம் வாங்கினால், அரை லிட்டர் சாராயம் இலவசம் என்று அதிரடி ஆடி தள்ளுபடி சலுகை விலையில் அமோகமாக விற்பனை செய்துள்ளாராம் இந்த தகவல் வேகமாக பரவியதையடுத்து அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மது பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாட்டர் பாட்டில்கள் வாட்டர் கேன்கள் பாலிதீன் கவர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று போட்டி போட்டுக் கொண்டு கள்ளச்சாராயத்தை வாங்கி வந்ததாக அப்பகுதி மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 

போதையில் இளைஞர்கள் சீர் அழிவதை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த நேரத்தில் ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி விலையில் துணிகளை விற்பனை செய்வது போன்று தள்ளுபடி விலையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல ஒரு லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் என கள்ளச்சாராய விற்பனை பரபரப்பாக்கி உள்ளனர்.  இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மலை கிராம பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மலை வாழ் மக்கள் இளைஞர்கள் போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற ஆந்திரா பகுதிகளுக்கு செம்மரம் வெட்டுவதற்கு கூலிக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையில் சிக்கி சீரழிகிறார்கள். இல்லையென்றால்  மலைப்பகுதியில் உள்ள மறைவிடங்களில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு அதை காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கும் கடத்தி விற்பனை செய்கிறார்கள். எனவே மலைவாழ் மக்கள் உழைத்து முன்னேற அவர்கள் பிழைப்புக்கு ஏற்ற வகையில் நியாயமான முறையில் தொழில் செய்து பிழைக்கும் வகையில் அரசு அவர்களுக்கு தொழில் சார்ந்த வருமானத்தை உருவாக்கித் தர வேண்டும் என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.