சேலத்தில் விளையாட்டு பூங்காக்களை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சக கட்சியினருடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடினார்.
சேலம் மாநகராட்சி பகுதியில் 12 இடங்களில் ரூ.5 கோடியில் பசுமைவெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சிறுவர்கள், முதியோர், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் வகையிலும் நவீன பூங்காக்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, பசுமைவெளி பூங்காக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 31, 2018) திறந்து வைத்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்கேற்ற பேட்டரி வாகனங்களையும் துவக்கி வைத்தார்.
அம்மாபேட்டை அய்யாசாமி பசுமைவெளி பூங்காவில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து மைதானத்தைப் பார்வையிட்டார். அப்போது கட்சியினர், இறகுப்பந்து விளையாடி, மைதான பயன்பாட்டை துவக்கி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராக்கெட் மட்டையால் இறகுப்பந்தை லவ்-ஆல் சர்வீஸ் செய்தார்.
அவருடன் சேலம் எம்.பி. பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டு இறகுப்பந்தை தட்டி விட்டார். எதிர் முனையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன் பந்தை சர்வீஸ் செய்தார். முதல்வர் ஆர்வமாக இறகுப்பந்து விளையாடியதைப் பார்த்த விழாவுக்கு வந்திருந்த அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் கைத்தட்டி ரசித்தனர்.
இதையடுத்து நேரு கலையரங்கத்தில் நடந்த சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பள்ளிகள்தோறும் சாலை பாதுகாப்புக்குழு பணியில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளையும், பாதுகாப்பு கவசங்களையும் வழங்கினார்.
'லவ்-ஆல்' சர்வீஸ் போட்ட எடப்பாடி! சேலம் விழாவில் 'கலகல'!!
சார்ந்த செய்திகள்
Next Story
“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம். பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.
இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின் எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.