Skip to main content

ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் உத்தரவில் திடீர் மாற்றம்... லாரி அதிபர்கள் குஷி!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

lorry owners association president says

 

கனரக வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற உத்தரவைத் தளர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தமிழ்நாட்டில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆர்டிஓ அலுவலகங்களில் எஃப்சி (தகுதிச்சான்றிதழ்) பெறும்போது, குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் ஒளிரும் ஸ்டிக்கரை (ரிஃப்ளக்டிங் ஸ்டிக்கர்) மட்டுமே ஒட்ட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

 

இந்த உத்தரவை நீக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து ஒளிரும் ஸ்டிக்கர் வாங்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவுக்கு விலக்கு அளித்துள்ளது.

 

ஏஏஆர்ஐ, ஐசிஏடி ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் ஏஐஎஸ் 090 தரத்துடன் கூடிய எந்த ஒரு கம்பெனியிலும் ஒளிரும் ஸ்டிக்கர் வாங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான வாங்கிலி செய்தியாளர்களிடம் கூறியது, "குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரித்த ஒளிரும் ஸ்டிக்கர்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.

 

மத்திய அரசின் அனுமதி பெற்ற பல நிறுவனங்கள் ஒளிரும் ஸ்டிக்கர்களை தயாரிக்கிறது. அனைத்து நிறுவனங்களின் ஸ்டிக்கரைப் பயன்படுத்தும்போது அதன் விலை குறையும். அதனால் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். 

 

தற்போது மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது ஆர்டிஓ அலுவலகங்களில் எஃப்சி பெற லாரி உரிமையாளர்களுக்கு 1,500 முதல் 4,500 ரூபாய் வரை கூடுதல் செலவு குறையும்." இவ்வாறு வாங்கிலி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.