Skip to main content

தேர்தல் புறக்கணிப்பு செய்வோம்... சார் ஆட்சியரிடம் மனு அளித்த வீடியோ ஒளிப்பதிவாளர்கள்...!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

Let's boycott the election Video cameramen who petitioned the Collector

 

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பணம் பட்டுவாடா செய்தல், பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

 

அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்வையிடும் குழு, கணக்கீட்டுக் குழு ஆகிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் பணிகளை வீடியோ எடுப்பதற்காகவும், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ எடுப்பதற்காகவும், அந்தந்த பகுதியில் உள்ள வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களைப் பணிக்கு அமர்த்துவது வழக்கமாகும். 

 

ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் வீடியோ எடுக்கும் உரிமையைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள நிலையில், 8 மணி நேரத்திற்கு தேர்தல் ஆணையம் 2,050 ரூபாய் வழங்குவதாகவும், அவ்வாறு வழங்கப்படும் தொகையினை தனியார் நிறுவனம் முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு வழங்காமல், ரூபாய் 600 மட்டும் கட்டாயப்படுத்தி வழங்குவதாகவும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வேப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட ஒளிப்பதிவாளர்கள், விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள், தேர்தல் பணியில் தனியார் நிறுவனத்திற்கு வீடியோ, ஃபோட்டோ எடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு ரத்து செய்யாவிட்டால் புகைப்பட கலைஞர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என அனைவரும் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

மேலும், கரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பு, சுப நிகழ்ச்சிகள் எதுவுமின்றி பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக செயல்படுகிறது என்றும், தேர்தல் ஆணையம் புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.