Skip to main content

எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
ர்ர்ர்ர்

 

  யூ ஆர் ஆன்ட்டி இந்தியன் என பத்திரிகையாளர்களுடன் தகராறு.! திமுக எம்.பி.கனிமொழி பற்றி அவதூறாக டுவிட்டரில் பதிவிட்டு தி.மு.கவினரின் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொண்டதோடு, சொந்த கட்சியினரால் விமர்சனத்துக்கு ஆளானவர் எச்.ராஜா.  அத்தோடு விட்டாரா இல்லை..!! பெரியார் சிலையை இடிப்பேன் என்று பதிவிட்டு பின்னர் ஒட்டு மொத்த தமிழினமே திறண்டதும் மண்டியிட்டு அட்மினை பழிகாடாக்கிய அசகாய சூரன் தான் எச்.ராஜா..! சிறுநீர் பாசனத்துறையை கண்டுபிடித்த விஞ்ஞானி..!

 

    இப்பவும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துகிட்டு போகுது, மக்கள் எல்லாம் மத்திய அரசுக்கு எதிராக திரும்பிட்டாங்க.! இதை நேக்கா மடை மாத்தனும்னா புதுசா ஒரு பிரச்சனையை உண்டு பண்ண வேண்டும் என்று போலீஸாரிடம் வான்டட்டாக வந்து வம்பு இழுத்திருக்கிறார்.  ஒன்றுக்கு 9 பிரிவுகளில் வழக்கும் பதிவு செஞ்சாச்சு. எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில் சேர்த்தாச்சு. எப்.ஐ.ஆர் பதிவு பண்ணி 3 நாட்கள் கழிந்துவிட்டது. ஆனால், இன்னும் காவல்துறை அரெஸ்ட் பண்ணலை. காரணம் அவர் ஒன்றும் அப்பாவி அல்ல. இந்த ஆட்சியை ஆட்டிப்படைக்கும் கட்சியின் முக்கிய புள்ளி. இதை அமைச்சர்களின் பேச்சில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

 

  “சட்டப்படி வழக்கு பதிவு பண்ணியாச்சு…சட்டம் தன் கடமையை செய்யும்” - அமைச்சர் ஜெயக்குமார். (அப்பாடா.. அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாம பொதுவா பேசிட்டோம்).

 

 “எச்.ராஜாவின் பேச்சு கோபத்தின் வெளிப்பாடு, அதை அப்படித்தான் எடுத்துக் கொள்ளனும். அவரு டாக்டர்ட்ட போய் பி.பி. செக் பண்ணனும். அதுக்காக நம்ம போலீஸை சாதாரணமா எடை போடக் கூடாது. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், கோழிக்குஞ்சை அமுக்கிற மாதிரி அமிக்கிறுவாங்க.” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (அப்புறம் என்ன….அமுக்கிட வேண்டிதானே?!)

 

  ‘’சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகிற அளவுக்கு எச்.ராஜா ஒன்றும் தப்பா பேசிடலை. அதனால கைது நடவடிக்கை இல்லை.’’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். (சரி…தான்..இதையே நீதிமன்றத்தில சொல்லுங்களேன் பார்ப்போம்)

 

    பி.ஜே.பி. மாநில தலைவர் தமிழிசையை கெட்ட வார்த்தையால் திட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சூர்யா தேவியை 24 மணிநேரத்தில் கைது செய்தது காவல் துறை.  விமான பயணத்தின்போது தமிழிசையிடம் வாக்கு வாதம் செய்த சோபியாவை புகார் கொடுத்த ஒரு மணிநேரத்தில் கைது செய்தது இதே காவல் துறை.

 

     எஸ்.வி.சேகருக்கு எதிரான கம்ப்ளைன்டை வச்சிகிட்டு அவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இப்ப அதே பாணியைத் தான் எச்.ராஜா மீது எடுக்க மறுக்குது இந்த காவல் துறை.  எஸ்.வி.சேகராவது  பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தினார். ஆனால், எச்.ராஜா உங்களையும், நீதித்துறையையும் கேவலப்படுத்தியவர். இதில் நீங்க கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால். அவர் சொன்னது உண்மை ஆகிவிடும். ஆமா அவர் சொன்னது.. காவலர்களின் ஈரல் அழுகிவிட்டது..!

சார்ந்த செய்திகள்

Next Story

“மற்றவர் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள்” - அண்ணாமலை

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

annamalai covai airport press meet talks about rasa speech 

 

மற்றவர் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

கலைஞரின் பேனா மையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ஐபிஎஸ் ஆனார் என திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசி இருந்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.

 

அப்போது அவர், "நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு என்ஜினீயரிங், மருத்துவம் படித்தவர்களின் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி சொந்தம் கொண்டாடுகின்றனர். இன்னொருவரின் குழந்தைக்கு ஏன் பெயர் வைக்கிறீர்கள். கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர்களில் எத்தனை பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆனார்கள். ராசா குடும்பத்தில் ஏன் யாரும் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆகவில்லை" எனக் கேள்வி எழுப்பி உள்ளார். 

 

 

Next Story

"இந்த நூறு வருடத்தில் பிளவை சந்திக்காத ஒரு இயக்கம் ஆர்எஸ்எஸ்... அதற்கு காரணம்.." - இடும்பாவனம் கார்த்திக்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

kl;

 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இந்து மதம் தொடர்பாக ஆ.ராசா பேசியது மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்த இருக்கும் பேரணி தொடர்பான செய்திகள் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆ.ராசாவுக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின் வருமாறு, 

 


கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுஸ்மிருதியில் காட்டப்பட்டுள்ளதாக சில கருத்துக்களை ஆ.ராசா பொதுக்கூட்ட மேடையில் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அளவில் கடுமையான எதிர்வினைகளை பாஜக தரப்பு செய்துவருகிறார்கள். ஆனால் ஆ.ராசா குறித்து பேசிய உங்கள் தலைவர் சீமான், அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்றார். இதனை எப்படிப் புரிந்துகொள்வது, அவரின் திடீர் ஆதரவு என்பது ஆ.ராசாவின் கருத்து மட்டும்தானா? இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன?

 

ஆ.ராசாவின் கருத்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்கிறார்கள். மனுஸ்மிருதியில் ஏற்றத்தாழ்வுகள் காட்டப்பட்டதா இல்லையா? தற்போது என்ன சொல்கிறார்கள், மனுஸ்மிருதி தற்போது நடைமுறையில் இல்லை என்கிறார்கள். அப்படியென்றால் சில இடங்களில் இடதுசாரி தோழர்கள் மனுஸ்மிருதியை கொளுத்தும் போராட்டத்தை நடத்தும் போது எதற்காக பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். நடைமுறையில் இல்லாத ஒன்றை எதிர்த்து எதற்காக பாஜக போராடுகிறது. இவர்கள் மனுதர்ம ஆட்சி நடத்தவே விரும்புகிறார்கள். அவர்கள் எண்ணம் அதுதான் என்பதைப் பலமுறை அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அரசியலமைப்பை விட இவர்கள் இந்த முறையிலான ஆட்சி நடத்தவே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வெளியில்  கூறுவது ஜனநாயக ஆட்சி என்பார்கள். நடைமுறையில் அவர்களின் செயல்பாடுகள் மனுதர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கும். அண்ணன் ஆ.ராசா சொல்வதில் எந்த தவறும் இல்லை. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. 

 

இந்தியாவில் இருக்கும் எந்த மதமும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துவதில்லை. அதன் கோட்பாடுகளைக் கொள்கைகளாக வைத்திருக்கவில்லை. ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக வைத்துள்ள மதமாக இந்து மதம் இருக்கிறது என்று ஆ.ராசா கூறியதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் ஆண், பெண்ணாக மாறலாம், பெண் ஒரு ஆணாக மாறலாம். ஆனால் ஒரு சாதியில் பிறந்த ஒருவர் மற்றொரு சாதிக்கு மாற முடியாது. குறிப்பிட்ட சாதியினர் இன்றளவும் நிமிர்ந்து நடக்கக் கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது, சாலையில் நடந்து செல்லக் கூடாது என்ற காட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றது. இதற்கு ஆதி மூலமாக இந்த மனுதர்மம் இருக்கிறது. அதனை எப்படி நாம் எதிர்க்காமல் இருக்க முடியும். 

 


கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட நாங்கள் அனைத்து மக்களுக்கும் சேர்ந்தே போராடுகிறோம், இந்த மனுஸ்ருமிதி கூட தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் இந்த விவாதம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள், இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 


மனுஸ்மிருதியில் எங்கேயாவது ஜாதி இல்லை என்று கூறியிருக்கிறதா? அப்படி இருந்தால் அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்து மதத்தின் அடிப்படையே ஜாதி என்ற ஒரு அமைப்பு சுற்றிவருவதாகவே அமைத்துள்ளார்கள். இதை யாரும் மறுக்க முடியுமா? விளிம்பு நிலை மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் என்று இன்றைக்குக் கூறுகிறார்கள். அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக, விளிம்பு நிலை மக்களாக இத்தனை ஆண்டுக்காலம் வைத்திருந்தது யார். இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா? சாதிக் கலவரம் நடக்கும் இடங்களில் இவர்கள் சென்று நாம் எல்லோரும் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவார்களா? அவ்வாறு இதுவரைக்கும் எந்த இடத்திலாவது சென்று இவர்கள் கூறியிருக்கிறார்களா? என்பதை உங்களுக்கு தெரியவந்தால் கூறுங்கள். ஆ.ராசா கருத்து சரியாகப் பட்டதால் அவரை ஆதரிக்கிறோம். அதைத்தாண்டி வேறு எதுவுமில்லை. 

 

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் விரைவில் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜனநாயக அமைப்பு கிடையாது. அதற்கு ஜனநாயகத்தின் மீது துளியளவு நம்பிக்கையும் கிடையாது. இந்த அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காலக்கொடுமை, அந்த அமைப்பில் வழிவந்த பாஜக இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அகண்ட பாரதம் என்ற ஒரே தேசத்தை அமைக்க நினைக்கிறார்கள். அவர்களை யார் தோலுரித்துக் காட்டுகிறார்களோ அவர்களை எதிர்த்து இவர்கள் கம்பு சுற்றுகிறார்கள். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது, விரைவில் மக்கள் முன் அவமானப்பட்டுப் போவார்கள் என்பது மட்டும் நிஜம்.

 


இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட இந்த நூறாண்டுக் காலத்தில் அது தொடங்கப்பட்ட நோக்கத்தை இலக்காக வைத்து பயணத்தை மேற்கொண்டு வருகிறது. ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுக் காலம் பிளவு பெறாத வண்ணம் இருக்கிறது என்றால் அது ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டும்தான். ஏனென்றால் அந்த அமைப்புக்கு ஆட்சி அமைக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற எந்த ஒரு நோக்கமும் இல்லை. மாறாக இந்து ராஷ்டிரா, அதாவது இந்தியா முழுவதும் இந்து மதமே ஆட்சி செய்ய வேண்டும், மாற்று மதத்தினரை வாக்கற்ற மக்களாக அகதிகளாக வைக்க வேண்டும் அல்லது அனைவரையும் இந்துக்களாக மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துள்ளனர். இதை நோக்கியே அவர்கள் தங்களின் செயல்பாடுகளை வைத்துள்ளார்கள்.