Skip to main content

திருக்கோவிலூர் பிரமுகர் கும்பகோணத்தில் கொலை... தீவிர விசாரணையில் காவல்துறையினர்! 

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Police in serious investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது வெங்கடேசன். இவர் தனியார் இயற்கை விவசாய வேளாண் இடுபொருட்கள் விற்பனை நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று (24.09.2021) கும்பகோணத்தில் விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்குகொள்வதற்காக திருக்கோவிலூரில் இருந்து கும்பகோணம் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஒரு லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது கும்பகோணம் அருகே உள்ள மருத்துவக் குடியைச் சேர்ந்த அன்பு என்பவருடன் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் கூட்டாக மது அருந்தியதாகவும் அதன் பிறகு அன்பு, வெங்கடேசன் இருவரும் லாட்ஜில் இருந்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், மனஞ்சேரி அருகில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே வெங்கடேசன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள வெங்கடேசன் குடும்பத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு லாட்ஜிலிருந்து மருத்துவக்குடி அன்பு, வெங்கடேசன் ஆகிய இருவரும் வெளியே சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து அன்புவை விசாரிப்பதற்காக போலீசார் மருத்துவக்குடி சென்றுள்ளனர். அங்கே அன்புவின் வீடு பூட்டிக் கிடந்துள்ளது.

 

அக்கம்பக்கத்தினரிடம் போலீஸ் விசாரித்தபோது, அன்பு தன் மனைவியை அழைத்துக்கொண்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டுச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்புவை தேடி போலீசார் தஞ்சாவூர் விரைந்துள்ளனர். திருக்கோவிலூர் நபர் கும்பகோணத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.