Skip to main content

7 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

krishnagiri district women incident police investigation

 

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 30), தனியார் நிறுவன தொழிலாளி. 

 

இவருடைய மனைவி தீபா (வயது 26). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும், 3 வயதில் வர்ணிதா மற்றும் 7 மாதத்தில் தனுஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

 

வெங்கடேஷுக்கும் தீபாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த தீபா, அக். 25ஆம் தேதியன்று, உரிகம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேஷ், வரும் வெள்ளிக்கிழமை (29.10.2021) அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். 

 

இந்நிலையில், சிறுமி வர்ணிதாவை வீட்டில் தூங்க வைத்துவிட்டு கைக்குழந்தை தனுஸ்ரீயுடன் தீபா திடீரென்று மாயமானார். மாமியார் தங்கம்மா மருமகளையும், பேத்தியையும் பல இடங்களில் தேடிப் பார்த்தார். இதனால் பதற்றமடைந்த அவர், தன் மகனிடமும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களிடமும் தீபாவும், கைக்குழந்தையும் காணாமல் போனது குறித்து கூறியதன்பேரில் அனைவரும் பல இடங்களிலும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. 

 

சந்தேகத்தின்பேரில் அந்த ஊரில் உள்ள ஒரு கிணற்றில் தேடிப் பார்த்தபோது தீபா மற்றும் தனுஸ்ரீ இருவரின் சடலங்கள் கிடப்பது தெரியவந்தது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி காவல்நிலைய காவல்துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

தீபா, முதலில் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, அதன்பிறகு தானும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. 

 

இது ஒருபுறம் இருக்க, தீபாவின் தந்தை கிருஷ்ணன், அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், தனது மகளிடம் வரதட்சனைக் கேட்டு வெங்கடேஷ் சித்ரவதை செய்ததாகவும், அதனால் அவர் விரக்தியடைந்து குழந்தையுடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து காவல்துறையினர், சந்தேக மரண வழக்காக பதிவுசெய்து இச்சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர். வெங்கடேஷுக்கும், தீபாவிற்கும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா நேரடியாக விசாரணை நடத்திவருகிறார். ஓசூர் ஆர்டிஓ நிசாத் கிருஷ்ணாவும் விசாரணை நடத்திவருகிறார். கைக்குழந்தையுடன், இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.