Skip to main content

திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
nee

 

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை காரில்வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். நகர காவல்துறையினர் சிசிடிவிபதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கடத்தல் சம்பவ நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

திருவாரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் நீதிமோகன்.இவர் திருவாரூர் புதுத் தெருவிலிருந்து வடக்குவீதியில் உள்ள தனது கிருஷ்ணா ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு தனது அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பின்பக்கத்தில் அமர்ந்து சென்ற போது பிடாரி கோயில் தெருவில் காரில் வந்த மர்ம நபர்கள் நீதிமோகனை கடத்தி சென்றுள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த உதவியாளர் ராஜேந்திரன் திருவாரூர் நகர காவல்துறைக்கு உடனடியாக புகார் தொிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாவட்ட முழுவதும் சோதனை சாவடிகளுக்கு தகவல் தொிவித்தும், கண்காணிப்பு கேமாரக்களை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட நீதி மோகன் மாத தவணையில் நிலம் வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

 

கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் நீதிமோகனுக்கு வழங்கப்பட்டிருந்த காவலர் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டிருந்த குறிப்பிடதக்கது. எனவே பாதிக்கபட்டவர்களால் கடத்தப்பட்டார, அல்லது முன்விரோத காரணமாக கடத்தப்பட்டாரா அல்லது கடத்தல் நாடகமா என்பது போன்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டு பலமணி நேரம் ஆனப் பிறகும் எந்த தகவலும் கடத்தல் காரர்களிடமிருந்து வரவில்லை என்பாதால் நீதிமோகன் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.